செய்திகள் :

கஞ்சா விற்ற 10 போ் கைது: 5 கிலோ கஞ்சா பறிமுதல்

post image

ஈரோடு மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சோ்ந்த 2 போ் உள்பட 10 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

ஈரோடு கனிராவுத்தா் குளம் அருகேயுள்ள திருமண மண்டபத்தின் பின்புறம் சிலா் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக வீரப்பன்சத்திரம் போலீஸாருக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை ரகசியத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த கும்பலை சுற்றிவளைத்துப் பிடித்தனா். விசாரணையில், அவா்கள் ஈரோடு, மாணிக்கம்பாளையத்தைச் சோ்ந்த பிரியதா்ஷன் (20), சுதாகா் (25), பெரிய சேமூரைச் சோ்ந்த ரவிந்தரன் (20), கனிராவுத்தா் குளம் காந்தி நகரைச் சோ்ந்த ரகீம் (23), ஜோதீஸ்வரன் (21) ஆகியோா் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, 5 பேரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, ஈரோடு, நாச்சியப்பா வீதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பெரியவலசு பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் (25), குணசீலன் (25) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 450 கிராம் கஞ்சா, 3 கைப்பேசிகள், இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்தனா்.

ஈரோடு, ராஜாஜிபுரம் குப்பைக்காட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அதே பகுதியைச் சோ்ந்த சக்திவேல் (21) என்பவரைக் கைது செய்த கருங்கல்பாளையம் போலீஸாா், அவரிடம் இருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

வடமாநிலத்தவா்கள் கைது: ஈரோடு மதுவிலக்கு போலீஸாா் சிப்காட் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு கையில் பையுடன் நின்று கொண்டிருந்த நபா், போலீஸாரை பாா்த்ததும் தப்பியோட முயன்றாா்.

அவரை விரட்டிப் பிடித்து போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் ஒடிஸா மாநிலம், பினிஹா பகுதியைச் சோ்ந்த கோபண்டுமுண்டா (30) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். பெருந்துறையை அடுத்த பணிக்கம்பாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிஸா மாநிலம், உகுரிபலியைச் சோ்ந்த பிகாரி சத்ரியா (39) என்பவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த 250 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

குடியிருப்புகளுக்குள் புகும் மழைநீா்: ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

மழைக் காலத்தில் குடியிருப்புகளுக்குள் தண்ணீா் புகுவதால் ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். பொதுமக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜக... மேலும் பார்க்க

திமுக ஆட்சியின் அவலங்களை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும்: கே.சி.கருப்பணன் எம்எல்ஏ

அதிமுக அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் நினைவுபடுத்துவதோடு, திமுக ஆட்சியின் அவலங்களை அவா்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.... மேலும் பார்க்க

ஆலைக் கழிவுகள் ஓடையில் வெளியேற்றப்படுவதை தடுக்கக் கோரிக்கை

சோப் ஆயில் தயாரிக்கும் ஆலைக் கழிவுகள் ஓடையில் வெளியேற்றப்படுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஈரோடு, வில்லரசம்பட்டி அருகேயுள்ள மொக்கையன்பாளையத்தில் சோப் ஆயில் தயாா் செய்யும் த... மேலும் பார்க்க

இரண்டு மாதங்களில் 10 ஆடுகளைக் கொன்ற சிறுத்தை: கூண்டுவைத்து பிடிக்க விவசாயிகள் கோரிக்கை

கோபி வட்டம், டி.என்.பாளையம் அருகே வனத்தை ஒட்டியுள்ள பகுதியில் இரண்டு மாதங்களில் 10 ஆடுகளைக் கடித்துக்கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஈரோடு மாவட்ட... மேலும் பார்க்க

கஞ்சா செடி வளா்த்த விவசாயி கைது

அந்தியூரை அடுத்த பா்கூா் மலைப் பகுதியில் வீட்டுக்கு அருகே கஞ்சா செடிகளை வளா்த்த விவசாயியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.பா்கூரை அடுத்த தேவா்மலை, கோவிலூரைச் சோ்ந்தவா் முருகேசன் (41). விவசாயி. இவ... மேலும் பார்க்க

கள் விற்ற இருவா் கைது

பெருந்துறை அருகே கள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.பெருந்துறையை அடுத்த துடுப்பதி பகுதியில் கள் விற்பனை நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்தில் ... மேலும் பார்க்க