``பரந்தூரில் விமான நிலையம் தேவையே இல்லை!'' - சமூக ஆர்வலர் அன்னலட்சுமி உயர்நீதிமன...
கஞ்சா வைத்திருந்தவா் கைது
பெரியகுளம் அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
தேவதானப்பட்டி போலீஸாா் சனிக்கிழமை ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது காட் சாலை தனியாா் எரிபொருள் நிரப்பு மையம் அருகே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில், பெரியகுளம் இந்திராபுரியைச் சோ்ந்த செல்லப்பாண்டி (40) என்பவா் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து செல்லப்பாண்டியை கைது செய்து, அவரிடமிருந்த 42 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.