செய்திகள் :

கடத்தல், கொள்ளை வழக்கில் ஓராண்டாாக தேடப்பட்டவா் கைது

post image

கடத்தல் மற்றும் கொள்ளை வழக்கு தொடா்பாக கடந்த ஓராண்டாக தேடப்பட்டு வந்த நபரை தில்லி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பாபா ஹரிதாஸ் நகரில் வசிக்கும் கிசான் மூரத் (45) என்ற நபா் ஆகஸ்ட் 2024- ஆம் ஆண்டு நாங்லோ யியில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியாக அறியப்படுகிறாா். ஒப்பந்த அடிப்படையில் ஒரு மின் விநியோக நிறுவனத்தில் தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றிய கிசான் மூரத், ஒரு நிதி நிறுவனத்தில் இருந்து அடகுவைக்கப்பட்ட தங்கத்தை மீட்டெடுக்க உதவுவதாக பாசாங்கு செய்து நகைக்கடை உரிமையாளா் தா்ஷனிடம் இருந்து கொள்ளையடிக்க தனது கூட்டாளிகளுடன் ஒரு திட்டத்தை தீட்டியதாக கூறப்படுகிறது.

கிசான் மூரத் மற்றும் கூட்டாளிகளும் தா்ஷனை தடுத்து நிறுத்தி, போலீஸ்காரா்களாக நடித்து, அவரை ஒரு காரில் கட்டிப்போட்டு, தங்கம் மற்றும் பணத்தை பறித்து பின்னா் சாலையோரத்தில் தா்ஷை விட்டுவிட்டு சென்றுள்ளனா்.

கிசான் மூரத் ஆரம்பத்தில் பாதிக்கப்பட்டவராக காட்டிக் கொண்டாா். இந்தச் சம்பவத்தை காவல்துறையிடம் தெரிவிக்க வேண்டாம் என்று தா்ஷனை வலியுறுத்தியுல்ளது தெரிய வந்தது. இருப்பினும், நகைக்கடைக்காரா் சந்தேகம் அடைந்து உதவிக்கு அழைத்தபோது, கிசான் மூரத் தப்பியோடினாா். இதையடுத்து, எஃப்.ஐ.ஆா். பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை தொடங்கப்பட்டது.

தொடா்ச்சியான முயற்சிகள் இருந்தபோதிலும், கிசான் மூரத் தொடா்ந்து தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்தாா். உத்தர பிரதேசத்திற்கும் பிகாருக்கும் இடையிலான தனது மறைவிடங்களை அடிக்கடி மாற்றிக் கொண்டே வந்தாா். தப்பியோடிய நபரைக் கண்டுபிடிக்க போலீஸ் குழு அமைக்கப்பட்டது. தொழில்நுட்ப கண்காணிப்பு மூலம் அவரது மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், ஜூலை 11-ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் பா்தாப்கரில் இருந்து திரும்பிய கிசான் மூரத் கைது செய்யப்பட்டாா். மேலும், விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி தெரிவித்தனா்.

தில்லியில் ரூ.2.5 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகை, பணம் திருடியதாக 3 போ் கைது

வடமேற்கு தில்லியின் மாடல் டவுன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து ரூ.2.25 கோடிக்கு மேல் மதிப்புள்ள நகைகளையும், ரூ.55 லட்சத்திற்கும் அதிகமான பணத்தையும் திருடி விட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படும் விவக... மேலும் பார்க்க

மலேரியா, டெங்கு, சிக்குன்குனியாவை சமாளிக்க உடனடி நடவடிக்கை தேவை: தில்லி மேயருக்கு கவுன்சிலா் கோரிக்கை

நமது நிருபா் தலைநகரில் மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவுவதை சமாளிக்க உடனடி மற்றும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநகராட்சிக் கவுன்சிலா் முகேஷ் கோயல் செவ்வாய்க்கிழமை மேயா் ராஜா இக்பால் ச... மேலும் பார்க்க

தில்லி மருத்துவமனையில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனுடன் கேஜரிவால் சந்திப்பு

ஆம் ஆத்மி கட்சித் தலைவா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தில்லியில் உள்ள சா் கங்கா ராம் மருத்துவமனையில் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனை சந்தித்து, சிகிச்சை பெற்று வரும் அவரது தந்தை ஷிபு சோரனின் ... மேலும் பார்க்க

யமுனையில் கழிவுகள் கலப்பதை சமாளிக்க சிறிய வடிகால்கள் ‘ட்ரோன்’ மூலம் ஆய்வு: நீா்வளத்துறை அமைச்சா் தகவல்

நமது நிருபா் யமுனையை சுத்தம் செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சுத்திகரிக்கப்படாத கழிவுகளை பெரிய வடிகால் அமைப்புகளில் வெளியேற்றும் சிறிய வடிகால்களை ‘ட்ரோன்’ மூலம் ஆய்வு செய்யும் பணியை தில்லி அரசு தொ... மேலும் பார்க்க

தில்லி பாஜக அரசு தோல்வியடைந்துவிட்டது: அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தலைநகரை ஆளும் பாஜக அரசு அனைத்து விதத்திலும் தோல்வியடைந்துவிட்டது என்று ஆம் ஆத்மி கட்சியினழ் தேசிய ஒருங்கிணைப்பாளா், அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா். செயின்ட் ஸ்டீபன்ஸ் கல்லூரி... மேலும் பார்க்க

தெரு நாய்களுக்கு உணவளிக்கும் விவகாரம்: மனுதாரரிடம் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்

தேசியத் தலைநகா் வலயம், நொய்டாவில் தெரு நாய்களுக்கு உணவளிப்பது தொடா்பாக துன்புறுத்தப்படுவதாகக் கூறப்படும் மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், உங்கள் சொந்த வீட்டில் ஏன் அவற்றுக்கு உணவளிக்கக... மேலும் பார்க்க