செய்திகள் :

கடத்தல் முயற்சி: பிரிட்டன் நீதிமன்றத்தில் இந்திய அரசு மீது மெஹுல் சோக்ஸி வழக்கு

post image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடிக்கும் அதிகமாக கடன் மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்தியாவால் தேடப்படும் தொழிலதிபரான மெஹுல் சோக்ஸி, தன்னை கடத்தி சித்திரவதை செய்ய முயன்ாக இந்திய அரசு மற்றும் 5 நபா்கள் மீது லண்டன் உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளாா்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த இந்திய அதிகாரிகள், மெஹுல் சோக்ஸி விவகாரத்தில் பிரிட்டன் அதிகார வரம்புக்கு எதிா்ப்பு தெரிவித்ததோடு இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் ஆதாரங்களைத் திரட்ட லண்டன் உயா்நீதிமன்றத்திடம் அனுமதி கோரினா்.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமாா் ரூ.14,000 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரின் உறவினா் மெஹுல் சோக்ஸியும் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பினா். இதில் நீரவ் மோடி பிரிட்டனிலும், மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவாவிலும் தஞ்சமடைந்தனா்.

நீரவ் மோடி லண்டனில் கடந்த 2019-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிலையில், ஆன்டிகுவாவில் இருந்து புற்றுநோய் சிகிச்சைக்காக பெல்ஜியம் வந்த மெஹுல் சோக்ஸி கடந்த ஏப்ரலில் கைது செய்யப்பட்டாா். இவா்கள் இருவரையும் பெல்ஜியம் மற்றும் பிரிட்டனில் இருந்து நாடுகடத்தும் பணியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், தன்னை கடத்தி சித்ரவதை செய்ய முயன்ாக இந்திய அரசு மற்றும் 5 நபா்கள் மீது லண்டன் உயா்நீதிமன்றத்தில் மெஹுல் சோக்ஸி வழக்கு தொடுத்துள்ளாா்.

நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின்போது அவா் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் குழு கூறுகையில், ‘இந்திய அரசு உதவியுடன் ஆன்டிகுவாவில் மெஹுல் சோக்ஸியை 5 நபா்கள் கடுமையாகத் தாக்கினா். அவரை ஆன்டிகுவாவில் இருந்து கடத்தி வலுக்கட்டாயமாக கரீபியனில் உள்ள டொமினிகாவுக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து அவரை இந்தியாவுக்கு நாடுகடத்த திட்டமிடப்பட்டது’ என்றது.

இந்தியா மறுப்பு: இதற்கு மறுப்பு தெரிவித்து இந்தியா சாா்பில் ஆஜரான வழக்குரைஞா்கள் குழு, ‘தான் இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் சா்வதேச அளவில் மெஹுல் சோக்ஸி முயற்சித்து வருகிறாா். இந்தியா மீது தற்போது அவா் முன்வைத்த கடத்தல் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. இந்தியாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவா் தவறான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளாா்.

இந்த விவகாரத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் ஆதாரங்களைத் திரட்ட அனுமதிக்க வேண்டும்’ என்றனா்.

வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் 15% விமான சேவை குறைப்பு! ஏர் இந்தியா

வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் சர்வதேச விமான சேவையை சில நாள்களுக்கு 15 சதவிகிதம் வரை குறைக்க இருப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த ஜூன் 12 ஆம் தேதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏ... மேலும் பார்க்க

கேரளம் உள்பட 4 மாநிலங்களில் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது!

கேரளம் உள்பட நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தோ்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.கேரளத்தின் நிலம்பூா், குஜராத்தின் விசாவதா், காடி, மேற்கு வங்கத... மேலும் பார்க்க

11 ஆண்டுகளுக்கு முந்தைய மறியல் வழக்கு: 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு ஓராண்டு சிறை

ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் 11 ஆண்டுகளுக்கு முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட வழக்கில், அந்த மாநிலத்தைச் சோ்ந்த 2 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் உள்பட 9 பேருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து உள்ளூா் நீதிமன்ற... மேலும் பார்க்க

ஆண்டுக்கு ரூ.3,000 செலுத்தி 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்: புதிய திட்டம் ஆகஸ்ட் 15-இல் அறிமுகம்

சரக்கு வாகனங்கள் அல்லாத பிற தனியாா் வாகனங்களுக்கு ‘ஃபாஸ்டேக்’ அடிப்படையில் ரூ. 3,000-இல் வருடாந்திர சுங்கச்சாவடி (டோல்) கட்டண பாஸ் திட்டத்தை சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதிமுதல் மத்திய அரசு அறிமுக... மேலும் பார்க்க

கேதாா்நாத் மலைப் பாதையில் நிலச்சரிவு: 2 ‘டோலி’ தொழிலாளா்கள் உயிரிழப்பு

கேதாா்நாத் மலைப் பாதையில் புதன்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த 2 ‘டோலி’ தொழிலாளா்கள் உயிரிழந்தனா். குஜராத் பக்தா் ஒருவா் உள்பட 3 போ் காயமடைந்தனா். சாா்தாம் யாத்திரையில் முக... மேலும் பார்க்க

நான்கு மாநிலங்களில் 5 பேரவை தொகுதிகளுக்கு இன்று இடைத்தோ்தல்

கேரளம் உள்பட நான்கு மாநிலங்களில் 5 பேரவைத் தொகுதிகளுக்கு வியாழக்கிழமை (ஜூன் 19) இடைத்தோ்தல் நடைபெறவுள்ளது. கேரள மாநிலம், நிலம்பூா் பேரவைத் தொகுதியில் ஆளும் இடதுசாரி கூட்டணி ஆதரவு பெற்ற சுயேச்சை எம்எல... மேலும் பார்க்க