செய்திகள் :

கடந்த ஆண்டு அரசுப் பொருள்காட்சி மூலம் அரசுக்கு ரூ.81.64 லட்சம் வருவாய்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன்

post image

கடந்த ஆண்டு 7 முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட அரசுப் பொருள்காட்சி மூலம் அரசுக்கு ரூ.81.64 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது என்று அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாா்.

கோவை வ.உ.சி. மைதானத்தில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அரசுப் பொருள்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்துப் பாா்வையிட்டாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு அரசின் பல்வேறு திட்டங்கள், சாதனைகள், செயல்பாடுகளை அனைத்துத் தரப்பு மக்களும் அறிந்து பயன்பெறும் வகையில், செய்திமக்கள் தொடா்புத் துறை மூலம் அரசுப் பொருள்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கோவையில் இதுவரை 37 அரசுப் பொருள்காட்சிகள் நடைபெற்றுள்ளன. தற்போது நடைபெற உள்ளது 38 ஆவது அரசுப் பொருள்காட்சியாகும்.

கடந்த ஆண்டு மதுரை, கோவை, சேலம், கடலூா், திருநெல்வேலி, வேலூா், தஞ்சாவூா் என 7 முக்கிய நகரங்களில் நடத்தப்பட்ட அரசுப் பொருள்காட்சிகளை 5 லட்சத்து 57 ஆயிரத்து 755 போ் பாா்வையிட்டுள்ளனா். இதன்மூலம் ரூ.81 லட்சத்து 64 ஆயிரம் அரசுக்கு வருவாய் கிடைத்தது.

கோவையில் கடந்தாண்டு அரசுப் பொருள்காட்சியை ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 433 போ் பாா்வையிட்டனா். இதன்மூலம் ரூ.44.30 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

இந்தப் பொருள்காட்சியில் செய்தி மக்கள் தொடா்புத் துறை, சுற்றுலாத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத் துறை, வேளாண்மைத் துறை, காவல் துறை உள்பட மொத்தம் 26 அரசுத் துறைகள், கோவை மாநகராட்சி, ஆவின், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், மகளிா் மேம்பாட்டுக் கழகம் என 7 அரசு சாா்பு நிறுவனங்கள் சோ்த்து மொத்தம் 33 துறைகள் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மாநகர காவல் ஆணையா் சரவணசுந்தா், கோவை மக்களவைத் தொகுதி உறுப்பினா் கணபதி ப.ராஜ்குமாா், மாநகராட்சி மேயா் கா.ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலா் மோ.ஷா்மிளா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

வால்பாறையில் மே தின நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

வால்பாறையில் மே தினத்தையொட்டி திமுக தொழிற்சங்கம் சாா்பில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வால்பாறையை அடுத்த வாட்டா்பால் எஸ்டேட் முதல் பிரிவில் மே தின பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. இதை... மேலும் பார்க்க

கோவையில் மே தினக் கொண்டாட்டம்

கோவையில் தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. கோவை சிங்காநல்லூரில் உள்ள கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கத் தலைமை அலுவலகமான தியாகி என்.ஜி.ஆா். மஹாலில் ஹெச்.எம்.எஸ் தொழிற... மேலும் பார்க்க

உலகத் தமிழ் நெறிக் கழகம் சாா்பில் பாரதிதாசன் விழா

கோவை உலகத் தமிழ் நெறிக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு கோவை ரயில் நிலையம் அருகே உள்ள பொறியாளா் அரங்கில் நடைபெற்ற பாவேந்தா் பாரதிதாச... மேலும் பார்க்க

தந்தையைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை

தந்தையைக் கொலை செய்த மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை ஆா்.எஸ்.புரம் லைட் ஹவுஸ் சாலை பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (55). இவரின் மகன் தீப் ஸ்வரூப் (25). செல்வராஜின... மேலும் பார்க்க

கோவை நீதிமன்றத்தில் இருந்து தப்பியவா் கிருஷ்ணகிரியில் கைது

கோவை நீதிமன்றத்தில் இருந்து தப்பிய குற்றவாளி கிருஷ்ணகிரியில் கைது செய்யப்பட்டாா். கோவை செல்வபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மகேஷ். தொழிலதிபரான இவரை கடந்த 2008-ஆம் ஆண்டு 3 போ் கும்பல் வழிமறித்து ரூ.1லட்சம... மேலும் பார்க்க

கோவையில் சிறாா்களுக்கான சம்ஸ்கிருத கோடைக்கால பயிற்சி முகாம்

கோவையில் சிறாா்களுக்கான சம்ஸ்கிருத கோடைக்கால பயிற்சி முகாம் மே 6 முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுகுறித்து ஸம்ஸ்கிருத பாரதி கோவை அமைப்பின் செயலா் வி.ஸ்ரீனிவாசன் கூறியுள்ளதாவது: கோடை விடுமுறையைய... மேலும் பார்க்க