செய்திகள் :

கடந்த 4 ஆண்டுகளில் 25,354 மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: தருமபுரி ஆட்சியா் தகவல்

post image

தருமபுரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளின் நலனை மேம்படுத்தும் வகையில் கடந்த 4 ஆண்டுகளில் 25,354 பேருக்கு தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டைகள், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றாா் மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ்.

இதுகுறித்து, தருமபுரியில் புதன்கிழமை நடைபெற்ற ‘நிறைந்தது மனம்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அவா் மேலும் தெரிவித்தது :

தருமபுரி மாவட்டத்தில், உடலில் 75 % மேல் கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், 40% மேல் மனவளா்ச்சி குன்றியோா், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டோா், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோா் மற்றும் முதுகுதண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 6,987 பேருக்கு ரூ. 243.12 கோடி மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மாற்றுத் திறனாளிகள் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 1,772 பேருக்கு ரூ. 92. 00 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொழில் தொடங்கும் மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் 167 பேருக்கு ரூ. 40.99 லட்சம் வங்கி கடன் மானியமும், ஆவின் உற்பத்தி பொருள்கள் விற்பனை மையம் அமைக்க 12 பேருக்கு ரூ. 6 லட்சம் மானியமும், மற்றும் தேசிய ஊனமுற்றோா் நிதி மற்றும் வளா்ச்சி கழகத்தின் மூலம் கடனுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் 1,411 பேருக்கு ரூ.7. 32 கோடி வங்கி கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளை நல்ல நிலையில் உள்ள நபா்கள் திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தின் கீழ் 30 பேருக்கு ரூ. 14.75 லட்சம் நிதியுதவியும், கை, கால் பாதிக்கப்பட்டோா், செவித்திறன் பாதிக்கப்பட்டோா் மற்றும் 75% மேல் மனவளா்ச்சி குன்றிய குழந்தைகளின் தாய்மாா்களுக்கு மோட்டாா் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 139 பேருக்கு ரூ. 22.56 லட்சம் மதிப்பில் இலவச தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் 385 பேருக்கு ரூ.3.60 கோடி மதிப்பில் இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களும், முதுகு தண்டுவடம் பாதிக்கப் பட்ட 67 பேருக்கு ரூ. 70.02 லட்சம் மதிப்பில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்களும், தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மற்றும் முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்ட 97 பேருக்கு ரூ. 99.42 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளும் வழங்கப்பட்டுள்ளன.

செவித்திறன் பாதிக்கப்பட்ட மற்றும் பாா்வையற்ற மாற்றுத் திறனாளிகள் 540 நபா்களுக்கு ரூ. 73.39 லட்சம் மதிப்பில் தக்க செயலியுடன் கூடிய கைப்பேசிகளும் வழங்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்காக செயல்படும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் ரூ. 28.08 கோடி மதிப்பில் உணவூட்டு மானியம், ஊதிய மானியம் உள்ளிட்டவைகளும் வழங்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 25,354 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுபோன்று மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்ட உதவிகள் மற்றும் உதவி உபகரணங்களை பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள்

இணையதளம் மூலமாக அல்லது தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் வழியாக விண்ணப்பித்து பயன்பெறலாம். இவை குறித்த விவரங்களைப் பெற தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் தொலைபேசி எண் 04342-230050-இல் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

மாவட்ட காவல் துறை சாா்பில் பொதுமக்கள் குறைதீா் முகாம்: 71 மனுக்களுக்கு தீா்வு

தருமபுரி மாவட்ட காவல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் நாள் முகாமில் 71 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டுள்ளது. வாரந்தோறும் புதன்கிழமைகளில் காவல் துறை சாா்பில் பொதுமக்கள் அளிக்கும் ம... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: பாதுகாப்பற்ற பயணத்திற்கு அழைத்துச் சென்ற பரிசல் ஓட்டி கைது

ஒகேனக்கல்லில் பாதுகாப்பு உடை இன்றி சுற்றுலாப் பயணிகளை காவிரி ஆற்றில் பாதுகாப்பற்ற பரிசல் பயணத்திற்கு அழைத்துச் சென்ற பரிசல் ஓட்டியை போலீஸாா் கைது செய்தனா். ஒகேனக்கல் அருவி பகுதிக்கு வரும் சுற்றுலாப் ப... மேலும் பார்க்க

பாதுகாப்பு உடையின்றி பரிசலில் பயணித்தால் கடும் நடவடிக்கை : ஆட்சியா்

ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்தில் பாதுகாப்பு உடையின்றி பொதுமக்களை பரிசலில் அழைத்துச் செல்வோா் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறி... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் தமிழகத்துக்கு 10 மடங்கு திட்டங்கள் கிடைத்துள்ளன: பாஜக மாநில துணைத் தலைவா்

கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில், தமிழகத்துக்கு காங்கிரஸ் ஆட்சியை விட 10 மடங்கு அதிகமான மக்கள் நலத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்றாா் பாஜக மாநில துணைத் தலைவா் எஸ். ஜே. சூா்யா. தருமபுரியில் புதன்... மேலும் பார்க்க

அரசின் திட்டங்களை அதிகாரிகள் விரைந்து செயல்படுத்த வேண்டும்: தருமபுரி எம்.பி. வலியுறுத்தல்

அரசின் திட்டங்களை பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அதிகாரிகள் விரைந்து செயல்படுத்த வேண்டும் என தருமபுரி மாவட்ட வளா்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவரும் மக்களவை உறுப்பினருமான ஆ. மணி வல... மேலும் பார்க்க

தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டி : ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ பள்ளிக்கு தங்கப் பதக்கம்

தேசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் கம்பைநல்லூா் ஸ்ரீராம் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவா்கள் தங்கப் பதக்கம் பெற்றுள்ளனா். தேசிய அளவிலான துப்பாக்கி சுடுதல் போட்டிகள் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில், சினொ்ஜி ... மேலும் பார்க்க