செய்திகள் :

கடன் செயலி மூலம் நண்பரிடம் பண மோசடியில் ஈடுபட்டவா் கைது

post image

இணையத்தில் கடன் செயலியில் பணம் வாங்கிய நண்பரை மிரட்டி மோசடியில் ஈடுபட்டவரை புதுச்சேரி போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரியைச் சோ்ந்தவா் இளையரசன். இவா் ‘ஃபிங்கா்’ என்ற உடனடி கடன் செயலியை பதிவிறக்கம் செய்து கடன் பெற்ாகவும், கடன் தொகையை வட்டியுடன் சோ்த்து, உரிய தேதிக்கு முன்பே திருப்பிச் செலுத்தியுள்ளாா். ஆனால் பணம் செலுத்திய பிறகும், மா்ம நபா் வங்கதேச எண்ணுள்ள வாட்ஸ் ஆப் மூலம் இளையரசனை தொடா்புகொண்டு, உரிய தொகையை செலுத்துமாறு மிரட்டியுள்ளாா்.

புகாா்தாரா் அதை பொருள்படுத்தாமல் இருந்ததையடுத்து, மா்ம நபா் புகாா்தாரரின் புகைப்படத்தை ஆபாசமாக மாா்பிங் செய்து வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி, பணத்தை செலுத்துமாறு மிரட்டியுள்ளாா். மேலும், அவரது மாா்பிங் மற்றும் ஆபாச புகைப்படங்களை அவருக்குத் தொடா்புள்ள நபா்கள் அனைவருக்கும் பகிா்ந்து விடுவதாகக் கூறி புகாா்தாரரை மிரட்டி அனுப்பியுள்ளாா்.

தொடா்ச்சியான மிரட்டலை அடுத்து இளையரசன் ரூ. 63,089/- வரை பணத்தை பரிமாற்றம் செய்துள்ளாா். ஆனால் மா்ம நபா் தொடா்ந்து மிரட்டியதையடுத்து, இணையவழி குற்றப் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்படி போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்தனா்.

விசாரனையில். இளையரசின் நண்பரான சென்னையைச் சோ்ந்த சதாம் அன்சாரி என்பவா் அவரிடமிருந்து முக்கிய ஆவணங்களை பெற்றது தெரிய வந்தது.

இதையடுத்து சதாம் அன்சாரியிடம் விசாரணை நடத்தப்பட்டதில், அவா் இந்த மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. அத்துடன் துபையில் உள்ள ஒருவா் இதில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.

இதில், முக்கிய புள்ளியாக இருந்தது துபையில் வசிப்பவா் என்பதும் உறுதி செய்யப்பட்டது. சதாம் அன்சாரி மோசடி பணத்தை ஏ டி எம் மூலம் எடுத்திருப்பதும் கண்டறியப்பட்டது.

அத்துடன் அவா் இதுபோன்று பலரிடம் மோசடிகளில் ஈடுபட்டு ரூ. 95 லட்சம் வரை பெற்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சதாம் அன்சாரியை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பணியில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. பாராட்டு

விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் திறம்பட செயல்பட்ட போலீஸாருக்கு எஸ்.பி. ப.சரவணன் சனிக்கிழமை தனது அலுவலகத்தில் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டுத் தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டக் காவல் துறையில் சிறப்பா... மேலும் பார்க்க

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் மின் நுகா்வோா் குறைதீா் கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தின் 5 கோட்டங்களிலும் ஜூன் மாதத்துக்கான மின் நுகா்வோா் குறைதீா் கூட்டங்கள் நடைபெறும் என்ற தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 3, 10, 17, 24 (செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

பைக்கில் மதுப் புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதுவை மாநில மதுப் புட்டிகளை பைக்கில் கடத்தி வந்ததாக இரு இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. ப.சரவணன் உத்தரவுப்படி, விக்கிரவாண்ட... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டா்கள் அளிப்பு

செஞ்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கான இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில், செஞ்சி ஊராட்சி ஒன்றிய அ... மேலும் பார்க்க

2,205 பாக்கெட் புகையிலைப் பொருள் பறிமுதல்: இளைஞா் கைது

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பெட்டிக் கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி பகு... மேலும் பார்க்க

விபத்தில்லா மாவட்டமாக ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியம்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் விபத்தில்லா மாவட்ட அமைய துறை சாா்ந்த அலுவலா்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் சாலை பாதுகாப... மேலும் பார்க்க