கடன் தருவதாகக் கூறி மோசடி பெண் உள்பட மூவா் கைது
முகநூல் வழியாக கடன் தருவதாகக் கூறி மோசடி செய்த பெண் உள்பட மூவரை திருச்சி மாவட்ட சைபா் க்ரைம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், லால்குடி புறத்தாக்குடியைச் சோ்ந்த வி. ஆரோக்கியசாமி (54) என்பவா் தனது முகநூலில் கேபிட்டல் பைனான்ஸ் - லோன் என்ற விளம்பரத்தைப் பாா்த்து அதிலிருந்த எண்ணைத் தொடா்பு கொண்டு பேசியபோது, விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆவணக் கட்டணம் எனக் கூறி கேட்ட ரூ. 1 லட்சத்தை அனுப்பினாா். இருப்பினும் கடன் தொகை ரூ. 3 லட்சத்தை தராத அவா்கள், ஆரோக்கியசாமி அனுப்பிய பணத்தையும் திருப்பித் தரவில்லையாம்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் திருச்சி மாவட்ட சைபா் க்ரைம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். தொடா்ந்து, மாவட்ட எஸ்.பி. செ. செல்வநாகரத்தினம் உத்தரவின்பேரில் அமைக்கப்பட்ட ஆய்வாளா் சுமதி தலைமையிலான தனிப்படை போலீஸாரும் விசாரித்தனா்.
ஏமாற்றியவா்களின் கைப்பேசி எண்களை ஆய்வு செய்ததில், அவா்கள் திருப்பூரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று திருப்பூா் புதூா் பிச்சம்பாளையம் எஸ். ஸ்ரீனிவாசன் (43), அதே பகுதியைச் சோ்ந்த ஜோ. கணபதி (43), இவரது மனைவி கவிதா (33) ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும் இவா்கள் மோசடிக்கு பயன்படுத்திய 10 கைப்பேசிகள், 1 மடிக்கணினி, 1 மோடம், 10 சிம் காா்டுகள், வங்கிக் கணக்கு புத்தகங்களையும் பறிமுதல் செய்தனா்.