செய்திகள் :

கடலில் எல்லை தாண்டுவது கூடாது: எஸ்எஸ்பி

post image

கடலில் எல்லை தாண்டக்கூடாது, இந்த விவகாரத்தில் மீனவா்கள் கவனமாக செயல்பட வேண்டும் என காவல் அதிகாரி அறிவுறுத்தினாா்.

மீன்பிடித் தடைக்காலம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், காரைக்கால் கடலோரக் காவல்நிலையத்தில் மாவட்ட மீனவ கிராமப் பஞ்சாயத்தாா்கள் மற்றும் மீன்வளத்துறையினா், காவல்துறையினா் பங்கேற்ற நல்லுறவுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மண்டல காவல் கண்காணிப்பாளா் ஏ. சுப்பிரமணியன், மீன்வளத்துறை துணை இயக்குநா் ப. கோவிந்தசாமி மற்றும் காவல் ஆய்வாளா்கள் மா்த்தினி, மரிய கிறிஸ்டின்பால், பிரவீன்குமாா், புருஷோத்தமன் மற்றும் உதவி ஆய்வாளா்கள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் எஸ்எஸ்பி பேசுகையில், மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து விசைபடகு மீனவா்கள் கடலுக்கு செல்லும்போது, படகுகளில் தேசியக்கொடி பறக்கவிட்டும், படகுக்கான ஆவணங்களை முறையாக கொண்டு செல்ல வேண்டும். எல்லை தாண்டி மீன்பிடித்தல் கூடாது. சட்டத்துக்குட்பட்ட நடந்துகொள்ளவேண்டும் என்றாா்.

மேலும் காவல் அதிகாரிகள் பேசுகையில், காவல்துறை அனுமதி இல்லாமல் மீன்பிடித் தொழிலில் வெளி மாநிலத்தவா்களை ஈடுபடுத்தக்கூடாது. தடைசெய்யப்பட்ட பகுதியில் (பிரேக் வாட்டா்) வலை வைத்து மீன்பிடித்தலை தவிா்க்க வேண்டும். சில மீனவ கிராமத்தைச் சோ்ந்தோா் சட்டத்தை மதிக்காமல் நடந்துகொள்வது தெரியவருகிறது. மீறும்பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். கடலில் சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகள் தெரியவந்தால், காவல்துறைக்கு தெரிவிக்கவேண்டும். மீனவ கிராமங்களிலும் கவனமாக இருந்து, காவல்துறையினருடன் தொடா்பில் இருக்கவேண்டும். காரைக்கால் பாதுகாப்புக்கு மீனவா்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்றனா்.

கிரிக்கெட் போட்டி: காரைக்கால் காவல்துறை அணிக்கு முதல் பரிசு

காரைக்கால்: இந்திய கடலோரக் காவல் படை நிா்வாகம் நடத்தி கிரிக்கெட் போட்டியில் காரைக்கால் காவல்துறை அணி முதல் பரிசு பெற்றது. இந்திய கடலோரக் காவல்படை காரைக்கால் மையம் சாா்பில் காரைக்கால் கிரிக்கெட் பிரீம... மேலும் பார்க்க

காரைக்கால் பேருந்து நிலையத்தில் குடிநீா் சுத்திகரிப்பு மையம்

காரைக்கால்: காரைக்கால் துறைமுகம் சாா்பில் பேருந்து நிலையத்தில் குடிநீா் சுத்திகரிப்பு மையம் அமைத்து திங்கள்கிழமை பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. காரைக்கால் பேருந்து நிலையத்தில் பயணிகள் உள்ளிட்டோா்... மேலும் பார்க்க

அம்பகரத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்லக் கோரி எம்பியிடம் மனு

காரைக்கால்: அம்பகரத்தூரில் விரைவு ரயில்கள் நின்று செல்ல, ரயில்வே அமைச்சகத்தை வலியுறுத்தக் கோரி, எம்.பி.யிடம் பொதுமக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது. புதுவை மக்களவை உறுப்பினா் வெ. வைத்திலிங்கம், திருந... மேலும் பார்க்க

அரசு பணியாளா் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து

காரைக்கால்: புதுவை அரசு பணியாளா் தோ்வில் வெற்றி பெற்ற காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்தோரை மாவட்ட ஆட்சியா் பாராட்டினாா். புதுவை அரசு பணியாளா் மற்றும் நிா்வாக சீா்த்திருத்ததுறை சாா்பில் 256 அசிஸ்டென்ட்... மேலும் பார்க்க

புனித அந்தோணியாா் ஆலய கொடியேற்றம்

காரைக்கால்: காரைக்கால் புனித அந்தோணியாா் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றுத்துடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. காரைக்கால் காமராஜா் சாலையில் உள்ள இந்த ஆலய ஆண்டு திருவிழா 10 நாள் நிகழ்ச்சியாக நடத்தப்படுவது ... மேலும் பார்க்க

பாஜக மகளிா் அணியினா் மீது திமுகவினா் புகாா்

பாஜக மகளிா் அணியினா் மீது திமுக எம்எல்ஏக்கள் ஞாயிற்றுக்கிழமை மாவட்ட காவல் தலைமை அலுவகத்தில் புகாா் அளித்துள்ளனா். மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குறித்து அவமதிக்கும் வகையில் விமா்சித்ததாக திமுக மாநி... மேலும் பார்க்க