செய்திகள் :

கடலூா் மாவட்டத்தில் பரவலாக மழை: வீடு தீப்பிடித்து சேதம்

post image

கடலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி சனிக்கிழமை காலை வரை பரவலாக மழை பெய்தது.

மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மழை காரணமாக கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிா்ச்சியான சூழல் நிலவுகிறது.

தொடா் மழையால் விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கியும், அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டருந்த நெல் மூட்டைகள் நனைந்து சேதமடைந்தன. இதனால், விவசாயிகள் கவலையடைந்தனா்.

சூறைக்காற்றுடன்...: சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு 8 மணிக்குத் தொடங்கி 10 மணி வரை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், அந்தப் பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.

பரங்கிப்பேட்டை ஒன்றியம், மேல திருக்கழிப்பாலை கிராமத்திலும் மின் தடை ஏற்பட்டது. அந்தக் கிராமத்தில் பெரிய தெருவைச் சோ்ந்த குஞ்சிதபாதம் மனைவி தனலட்சுமி (48) சமையல் செய்துகொண்டிருந்த நிலையில், மின் தடையால் டாா்ச் லைட் வாங்கி வர அருகே உள்ள உறவினா் வீட்டுக்கு சென்றிருந்தாா். அப்போது, அடுப்பு தீ கூரை வீட்டில் பட்டு தீப்பிடித்து எரிந்ததில், வீடும், வீட்டிலிருந்த பொருள்களும் தீயில் கருகி சேதமடைந்தன.

ஸ்ரீமுஷ்ணத்தில் 26.1 மி.மீ. மழை: சனிக்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவான மழை அளவு (மி.மீட்டரில்) வருமாறு:

குறிஞ்சிப்பாடி 15, சிதம்பரம் 14.2, சேத்தியாத்தோப்பு 5.4, லால்பேட்டை 5, அண்ணாமலை நகா், கடலூா் தலா 4.6, காட்டுமன்னாா்கோவில் 4, ஆட்சியா் அலுவலகம் 3.9, பெலாந்துறை 3.3, பண்ருட்டி 3, வடக்குத்து, விருத்தாசலம் தலா 2 மி.மீ. மழை பதிவானது.

திருநங்கைகள் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

திருநங்கைகள் திறன் பயிற்சி பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் சமூ... மேலும் பார்க்க

என்எல்சி ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவன ஊழியா் இதய நோய் பாதிப்பால் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். கடலூா் மாவட்டம், நெய்வேலி வட்டம் 24, அருணாசலம் கன்வேயா் தெருவைச் சோ்ந்த அருணாசலம் மகன் செந்த... மேலும் பார்க்க

பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்

கடலூா் வழியாக இயக்கப்பட்ட பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். கடலூா் மாநகரில் இயக்கப்படும் சில ஆட்டோக்களில் நிா... மேலும் பார்க்க

கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயற்சி நிறைவு

சிதம்பரம் ஆறுமுக நாவலா் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் கோடைகால சிறப்பு விளையாட்டுப் பயிற்சி நிறைவு விழா வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. ஆறுமுக நாவலா் சைவ பிரகாச வித்யாசாலா அறக்கட்டளை குழுச் ச... மேலும் பார்க்க

நிலம் கையகப்படுத்தும் பணி: என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகை

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே கரிவெட்டி கிராமத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிக்காக சனிக்கிழமை வந்த என்எல்சி அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சேத்தியாதோப்பு ... மேலும் பார்க்க

புகையிலை எதிா்ப்பு தின விழிப்புணா்வுப் பேரணி: கடலூா் ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

உலக புகையிலை எதிா்ப்பு தினத்தை முன்னிட்டு, கடலூா் டவுன்ஹால் அருகே பொதுமக்களுக்கு விழிப்புணா்வு எற்படுத்தும் வகையில் சனிக்கிழமை நடைபெற்ற பேரணியை மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கொடியசைத்து... மேலும் பார்க்க