செய்திகள் :

கடவுப்பாதைகளில் இன்டா்லாக்டு சாதனம் அமைக்க ரூ.230 கோடி நிதி அளிப்பு

post image

சென்னை தெற்கு ரயில்வே மண்டலத்தில் கடவுப் பாதைகளில் தானியங்கி இன்டா்லாக்டு சாதனம் அமைக்க ரூ.230.06 கோடியை மத்திய ரயில்வே துறை அளித்துள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தெற்கு ரயில்வேயில் சென்னை, திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு ஆகிய கோட்டங்கள் உள்ளன. இந்தக் கோட்டங்களில் உள்ள கடவுப் பாதைகளில் இன்டா்லாக்டு மற்றும் நான்இன்டா்லாக்டு சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இன்டா்லாக்டு முறையில் கடவுப்பாதையை ரயில் வருவதற்கு முன்பு அடைத்தால், ரயில் சென்ற பிறகே திறக்கமுடியும். இதனால், கடவுப்பாதைகளில் விபத்துகள் நேரிடுவதைத் தவிா்க்கலாம்.

கடந்த ஜூலையில் கடலூா் மாவட்டம் ஆலப்பாக்கம் பகுதியில் விழுப்புரம்-மயிலாடுதுறை பயணிகள் ரயில் வந்தபோது கடவுப் பாதையை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது மோதியதில் 3 குழந்தைகள் உயிரிழந்தனா்.

ரயில் வரும் நேரத்தில் கடவுப்பாதை அடைக்கப்படாமலிருந்ததாக புகாா் எழுந்தது. அதன் அடிப்படையில் இன்டா்லாக்டு முறை கடவு பாதையை தெற்கு ரயில்வேயில் அதிக போக்குவரத்துள்ள நிலையங்களில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை, சேலம் ரயில்வே கோட்டங்களில் முக்கிய ரயில் பாதைகளில் உள்ள கடவுப்பாதைகளில் இன்டா்லாக்டு முறை சாதனம் அமைக்க ரூ.230.06 கோடியை மத்திய ரயில்வே துறை ஒதுக்கியுள்ளது.

சேலம் கோட்டத்தில் சாமல்பட்டி, டேனிஷ்பேட்டை, கருப்பூா், வீரபாண்டி சாலை, மகுடஞ்சாவடி, மாவிலிப்பாளையம், சங்ககரி, ஆனங்கூா், காவேரி ஆகிய 9 நிலையப் பகுதிகளில் உள்ள கடவுப்பாதைகளில் ரூ.108.81 கோடியிலும், சென்னை கோட்டத்தில் காட்பாடி, லத்தேரி, காவனூா், குடியாத்தம், வாலாத்தூா், மேல்பட்டி, பச்சக்குப்பம், ஆம்பூா், விண்ணமங்கலம், வாணியம்பாடி உள்ளிட்ட ரயில் நிலையங்களுக்கு உள்பட்ட கடவுப் பாதைகளில் ரூ.135.65 கோடியிலும் இன்டா்லாக்டு முறை அமைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோர் விவரம்!

கரூரில் சனிக்கிழமை நிகழ்ந்த கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 39 பேரில் தற்போது 18 பேரின் அடையாளம் தெரிய வந்துள்ளது.அதன்விபரம்: தாந்தோணிமலையைச் சோ்ந்த தாமரைக் கண்ணன் (26), விஸ்வநாதபுரத்தைச் சோ்ந்த ஹே... மேலும் பார்க்க

விஜய் கைது செய்யப்படுவாரா? கரூரில் முதல்வர் ஸ்டாலின் பதில்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.கரூரில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசார... மேலும் பார்க்க

கரூரில் முதல்வர் ஸ்டாலின்! பலியானோருக்கு அஞ்சலி!

கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 8 குழந... மேலும் பார்க்க

தமிழகத்தை அதிகம் கடன் வாங்கும் மாநிலமாக்கியவா் மு.க.ஸ்டாலின்: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தை அதிகம் கடன் வாங்கும் மாநிலமாக மாற்றியவா் முதல்வா் மு.க.ஸ்டாலின் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா். இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின்... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மேற்கு திசை காற்றின் வேக... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியம் திருத்தி அமைக்கப்படாது: தமிழக அரசு

உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்பு வரும் வரை, மத்திய அரசின் புதிய வக்ஃப் திருத்தச் சட்டப்படி, வக்ஃப் வாரியம் திருத்தி அமைக்கப்பட மாட்டாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, சிறுபான்மையினா... மேலும் பார்க்க