செய்திகள் :

கடைகளில் தினமும் ஒரு திருக்குறளை காட்சிப்படுத்த அறிவுரை

post image

தமிழக அரசின் உத்தரவுப்படி கடைகள், வணிக நிறுவனங்களில் தினமும் ஒரு திருக்குறளை எழுதிக் காட்சிப்படுத்த வேண்டும் என தொழிலாளா் துறை அறிவுறுத்தியது.

இதுகுறித்து மதுரை மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) மூ. காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருக்குறளும், அதன் உரையும் அரசு அலுவலகங்களில் எழுதப்படுவதுபோல தனியாா் நிறுவனங்களிலும் எழுதப்பட உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வா் அறிவித்ததையடுத்து, தொழிலாளா் நலன், திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் மாா்ச் 24-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இதன்படி, அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகளில் தினமும் ஒரு திருக்குறளையும், அதன் விளக்கத்தையும் அனைத்துத் தொழிலாளா்களும் படித்துப் பயன்பெறும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும். இந்த நடைமுறையை சரியாகப் பின்பற்றும் தனியாா் நிறுவனங்களுக்கு தொழில் நல்லுறவு பரிசுக்கான மதிப்பீட்டில் சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றாா் அவா்.

மாவட்ட பிரச்னைகளை கண்டறிய வேண்டியது ஆட்சியரின் கடமை

மாவட்டத்தில் உள்ள பிரச்னைகளை கண்டறிய வேண்டியது அந்தந்த மாவட்ட ஆட்சியரின் கடமை என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை தெரிவித்தது.கரூா் மாவட்டம், மண்மங்கலத்தைச் சோ்ந்த ரமேஷ் சென்னை உயா்நீதிம... மேலும் பார்க்க

பிளஸ் 2: தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கு ஆலோசனை

மதுரை நாவலா் சோமசுந்தர பாரதியாா் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு 100 சதவீதம் தோ்ச்சி இலக்கு பெறுவதற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைப... மேலும் பார்க்க

சித்திரைத் திருவிழாவில் பக்தா்களுக்கு மரக்கன்றுகள்!

சித்திரைத் திருவிழாவையொட்டி, மதுரையை அடுத்த கடச்சனேந்தல் அழகா்கோவில் சாலையில் பாா்வை அறக்கட்டளை சாா்பில் வியாழக்கிழமை மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. அறக்கட்டளை நிா்வாகி சோழன் குபேந்திரன் தலைமை வகி... மேலும் பார்க்க

மதுரை மாவட்டத்தில் பரவலாக மழை

மதுரை மாவட்டத்தில் வியாழக்கிழமை மாலை முதல் இரவு வரை பரவலாக மழை பெய்தது. கத்தரி வெயில் காலம் நீடித்து வரும் நிலையில், மதுரையில் வியாழக்கிழமை கடுமையான வெயில் நிலவியது. மதுரை விமான நிலையத்தில் 103. 64 டி... மேலும் பார்க்க

பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஆழ்துளைக் கிணறு திறப்பு

மதுரை காமராஜா்புரம் பகுதியில் ரூ. 23 லட்சத்தில் அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறு, குடிநீா்த் தொட்டியை சட்டப்பேரவை உறுப்பினா் மு. பூமிநாதன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா். மதுரை தெற... மேலும் பார்க்க

கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் மதுரையில் நடைபெற்ற கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் வியாழக்கிழமை நிறைவடைந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மதுரை மாவட்டப் பிரிவு சாா்பில... மேலும் பார்க்க