செய்திகள் :

கடைசி டெஸ்ட்டில் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும்: ஸ்டுவர்ட் பிராட்

post image

இந்தியாவுக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் (ஜூலை 31) ஓவலில் தொடங்குகிறது.

ஆர்ச்சருக்கு ஓய்வளியுங்கள்

தொடரை வெல்வதற்கான முக்கியமான போட்டியில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ள நிலையில், இந்தியாவுக்கு எதிராக கடைசி டெஸ்ட் போட்டியில் வேகப் பந்துவீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும் என இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்டுவர்ட் பிராட் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது குறித்து அவர் பேசியதாவது: இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும். அவருக்கு ஓய்வு அளிக்கப்படாவிட்டால், அவரை அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து அணியில் பார்க்க முடியாது. கடைசி டெஸ்ட் போட்டியில் கஸ் அட்கின்சன் விளையாடலாம் என நினைக்கிறேன். அவருக்கு எந்தவித பணிச்சுமையும் இருப்பதாக தெரியவில்லை. மேலும், வலுவான எதிரணியுடன் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னும் விளையாடியதில்லை என்றார்.

காயம் காரணமாக 4 ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடாமலிருந்த ஜோஃப்ரா ஆர்ச்சர், லார்ட்ஸ் டெஸ்ட்டின் மூலம் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் களமிறங்கினார். லார்ஸ்ட் டெஸ்ட்டில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜோஃப்ரா ஆர்ச்சர், மான்செஸ்டர் டெஸ்ட்டில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பிறகு, வருகிற நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. ஆஷஸ் தொடரை கருத்தில்கொண்டு, ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு ஓய்வளிக்க வேண்டும் எனக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ஆஸி. ஆதிக்கம்..! சொந்த மண்ணில் மே.இ.தீவுகள் அணிக்கு தொடரும் சோகம்..!

Stuart Broad has said that fast bowler Jofra Archer should be rested for the final Test against India.

ஓவல் டெஸ்ட்: பும்ராவுக்குப் பதிலாக ஆகாஷ் தீப்!

இந்தியாவின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்ப்ரீத் பும்ரா ஓவல் டெஸ்ட்டில் விளையாடமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.ஆண்டர்சன் - டெண்டுல்கர் டிராபியில் இங்கிலாந்து அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. மா... மேலும் பார்க்க

லக்னௌ அணி புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண்!

லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய பந்து வீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.ஐபிஎல் தொடரில் மூன்று முறை சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்த ... மேலும் பார்க்க

நண்பரை தாக்கிய புகார்: வங்கதேச கிரிக்கெட் வீரர் மீது வழக்குப் பதிவு!

வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் தஸ்கின் அகமது தன்னை கொடூரமாகத் தாக்கியதாக சிறுவயது நண்பர் ஒருவர் புகாரளித்துள்ள சம்பவம் கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வங்கதேசத்தின் மிர்புரில் உள்ள ஒர... மேலும் பார்க்க

தென் ஆப்பிரிக்க டி20, ஒருநாள் தொடர்: பிக் பாஸ் நாயகனுக்கு அழைப்பு விடுத்த ஆஸ்திரேலியா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் தென்னாப்பிரிக்க அணி 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போ... மேலும் பார்க்க

5-ஆவது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா? இல்லையா? - பயிற்சியாளர் பதில்

5-ஆவது டெஸ்ட்டில் பும்ரா விளையாடுவாரா? இல்லையா? என்பதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக் பதில் அளித்துள்ளார்.இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்ய கடைசி டெஸ்ட்டில் வெற்... மேலும் பார்க்க

கேகேஆர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் விலகல்!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து சந்திரகாந்த் பண்டித் விலகியுள்ளார்கடந்த 2023 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்கு முன்பாக சந்திரகாந்த் பண்டித், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின... மேலும் பார்க்க