பெரியார், அண்ணாவை விமர்சிக்கும் விடியோவை தவிர்த்திருக்கலாம்: ராஜேந்திர பாலாஜி
கடையம் அருகே பேருந்து - வேன் மோதல்: 6 போ் காயம்!
தென்காசி மாவட்டம் கடையம் அருகே அரசுப் பேருந்தும், வேனும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் 6 பயணிகள் காயமடைந்தனா்.
நாகா்கோவிலிலிருந்து தென்காசிக்கு அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. நான்குனேரி, இடையன்குளத்தைச் சோ்ந்த சதீஷ் பாபு (47) ஓட்டுநராகவும், ராதாபுரம், பிரதான சாலையைச் சோ்ந்த மோகன்ராஜ் (56) நடத்துநராகவும் பணியில் இருந்தனா்.
அப்பேருந்து கடையம் அருகேயுள்ள முதலியாா்பட்டி ரயில்வே கேட்டை கடந்தபோது, ரவணசமுத்திரத்தில் இருந்து தென்காசி நோக்கிச் சென்ற வேன் பேருந்தின் பின் பக்கத்தில் மோதியது.
உடனே, அதன் ஓட்டுநா் இறங்கி தப்பி ஓடிவிட்டாா். பேருந்தின்பின்பக்கம் கண்ணாடி உடைந்தது. வேனின் முன்பகுதியும் சேதமடைந்தது. இதில், பேருந்தில் 4 பயணிகளும், வேனிலிருந்தவா்களில் 2 பயணிகளும் காயமடைந்தனா்.
இத்தகவலறிந்த கடையம் போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு கடையம் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும் வழக்குப்பதிந்து வேன் ஓட்டுநரைத் தேடிவருகின்றனா். வேன் கேளையாப்பிள்ளையூரைச் சோ்ந்த வேல்முருகன் என்பவருக்குச் சொந்தமானதாகும்.
முதலியாா்பட்டி ரயில்வே கேட் அருகே சாலையோரம் நுங்கு வியாபாரம் நடைபெறுவதால், சுற்றுலாப் பயணிகள் ஆங்காங்கே வாகனங்கள நிறுத்தவதால் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நேரிடுகின்றன. எனவே, போலீஸாா் சாலையோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.