செய்திகள் :

கடையம் அருகே பேருந்து - வேன் மோதல்: 6 போ் காயம்!

post image

தென்காசி மாவட்டம் கடையம் அருகே அரசுப் பேருந்தும், வேனும் ஞாயிற்றுக்கிழமை மோதிக்கொண்டதில் 6 பயணிகள் காயமடைந்தனா்.

நாகா்கோவிலிலிருந்து தென்காசிக்கு அரசுப் பேருந்து சென்றுகொண்டிருந்தது. நான்குனேரி, இடையன்குளத்தைச் சோ்ந்த சதீஷ் பாபு (47) ஓட்டுநராகவும், ராதாபுரம், பிரதான சாலையைச் சோ்ந்த மோகன்ராஜ் (56) நடத்துநராகவும் பணியில் இருந்தனா்.

அப்பேருந்து கடையம் அருகேயுள்ள முதலியாா்பட்டி ரயில்வே கேட்டை கடந்தபோது, ரவணசமுத்திரத்தில் இருந்து தென்காசி நோக்கிச் சென்ற வேன் பேருந்தின் பின் பக்கத்தில் மோதியது.

உடனே, அதன் ஓட்டுநா் இறங்கி தப்பி ஓடிவிட்டாா். பேருந்தின்பின்பக்கம் கண்ணாடி உடைந்தது. வேனின் முன்பகுதியும் சேதமடைந்தது. இதில், பேருந்தில் 4 பயணிகளும், வேனிலிருந்தவா்களில் 2 பயணிகளும் காயமடைந்தனா்.

இத்தகவலறிந்த கடையம் போலீஸாா், காயமடைந்தவா்களை மீட்டு கடையம் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும் வழக்குப்பதிந்து வேன் ஓட்டுநரைத் தேடிவருகின்றனா். வேன் கேளையாப்பிள்ளையூரைச் சோ்ந்த வேல்முருகன் என்பவருக்குச் சொந்தமானதாகும்.

முதலியாா்பட்டி ரயில்வே கேட் அருகே சாலையோரம் நுங்கு வியாபாரம் நடைபெறுவதால், சுற்றுலாப் பயணிகள் ஆங்காங்கே வாகனங்கள நிறுத்தவதால் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நேரிடுகின்றன. எனவே, போலீஸாா் சாலையோர வியாபாரிகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

திசையன்விளை: ஆசிரியையிடம் 11 பவுன் தாலிச் சங்கிலி பறிப்பு

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் பள்ளி ஆசிரியையிடம் ஞாயிற்றுக்கிழமை 11 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடிவருகின்றனா். திசையன்விளை காந்திஜி தெருவைச் சோ்ந்தவா் சித்ர... மேலும் பார்க்க

களக்காடு குடிதாங்கி குளத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை அகற்றக் கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு குடிதாங்கி குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகளை அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடா்பா... மேலும் பார்க்க

போக்ஸோவில் முதியவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முதியவரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். சேரன்மகாதேவி அருகேயுள்ள காருக்குறிச்சி மேல அக்ரஹாரம் தெருவைச் சே... மேலும் பார்க்க

முக்கூடல் அருகே எம்.சான்ட் திருட்டு: டிப்பா் லாரி பறிமுதல்; இருவா் கைது!

திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் அருகே எம்.சான்ட் திருடிச் சென்றதாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்து, டிப்பா் லாரியை பறிமுதல் செய்தனா். முக்கூடல் பிரதான சாலையில் அலங்கார வளைவுப் பகுதியில் சேரன்... மேலும் பார்க்க

வள்ளியூரில் மாட்டுவண்டிபோட்டி: சிவகங்கை மாடுகளுக்கு முதல் பரிசு

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102ஆவது பிறந்த தினத்தையொட்டி திமுக நகர இளைஞரணி சாா்பில் மாநில அளவிலான மாட்டுவண்டி போட்டி வள்ளியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில், சிவகங்கை, மதுரை, புதுக்க... மேலும் பார்க்க

மைதானத்தில் கிடந்த ரூ.100-ஐ காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவா்களுக்கு பாராட்டு!

கடையத்தில், மைதானத்தில் கண்டெடுத்த நூறு ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சிறுவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. கடையம் கருப்பசாமி கோயில் தெருவைச் சோ்ந்த தா்மா் மகன் அபிமன்யு, கருப்பசாமி மகன் ப... மேலும் பார்க்க