செய்திகள் :

கட்சி தொடங்கியதால் சரியும் எலான் மஸ்க் பங்குகள்! ரூ. 1.3 லட்சம் கோடி இழப்பு!

post image

அமெரிக்கா கட்சியைத் தொடங்கியதை அடுத்து, தொழிலதிபர் எலான் மஸ்க் நிறுவனப் பங்குகளின் மதிப்பு கடுமையாக சரியத் தொடங்கியுள்ளது.

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் தொழிலதிபருமான எலான் மஸ்க், அமெரிக்காவின் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிகளுக்கு மாற்றாக அமெரிக்கா கட்சியைத் தொடங்கியுள்ளதாக அந்நாட்டின் சுதந்திர தினத்தன்று (ஜூலை 4) அறிவித்தார்.

புதிய கட்சியைத் தொடங்குவது குறித்து எக்ஸ் தளப் பக்கத்தில் நடத்திய வாக்கெடுப்பில் மூன்றில் 2 பங்கு மக்கள் ஆதரவு தெரிவித்ததால், புதிய கட்சி அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அமெரிக்க மக்களுக்கு தங்களின் சுதந்திரத்தை மீட்டளிப்பதே அமெரிக்கா கட்சியின் நோக்கம் எனவும் எலான் மஸ்க் தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, எலான் மஸ்க் இவ்வாறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

டிரம்ப் நிர்வாகத்தில், அரசு செயல்திறன் மேம்பாட்டுத் துறை ஆலோசகராக மஸ்க் இருந்தார். இதில், பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார்.

இதனிடையே, நாளடைவில், அமெரிக்க வரிச்சலுகை, குடியேற்ற மசோதா தொடா்பாக டிரம்ப் - எலான் மஸ்க் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தக் கருத்து வேறுபாடு பொதுவெளியில் சர்ச்சையை ஏற்படுத்தியதால், அப்பதவியில் இருந்து மஸ்க் விலகினார். தற்போது புதிய கட்சியையும் தொடங்கியுள்ளார்.

அமெரிக்காவில் இரு கட்சி ஆட்சி முறை மட்டுமே பல ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில், தற்போது மூன்றாவது கட்சி அமெரிக்காவில் உருவாகியுள்ளது. இதனால், எலான் மஸ்க் தீவிரமாக அரசியலில் இறங்கியுள்ளது உறுதியாகியுள்ளது.

பங்குகள் சரிவு

அரசியல் கட்சி அறிவிப்பால், எலான் மஸ்க்கின் நிறுவனப் பங்குகள் சரிந்து வருகின்றன. டெஸ்லா பங்குகள் 6.8% வரை (திங்கள் கிழமை நிலவரம்) சரிந்துள்ளன. இதனால், 15.3 பில்லியன் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 1.3 லட்சம் கோடி. டொனால்ட் டிரம்ப்பிடம் இருந்து விலகிய பிறகு எலான் மஸ்க் சந்திக்கும் மிகப்பெரிய சரிவாக இது பார்க்கப்படுகிறது.

டிரம்ப் நிர்வாகத்தில் இருந்தது, தற்போது தனிக் கட்சி தொடங்கியது என இந்த ஆண்டில் அதிகப்படியாக அரசியல் நிர்வாகத்தில் மஸ்க் ஈடுபட்டுள்ளதால், அவரின் பங்குகள் இதுவரை 27% வரை சரிந்துள்ளன.

இதையும் படிக்க | பெங்களூரு வேலையைத் துறந்து, விவசாயத்தில் ரூ. 2.5 கோடி ஈட்டும் பிகார் இளைஞர்!

Following the start of the america party, the value of shares of businessman Elon Musk's company has begun to decline sharply

ராணா, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பேர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!

நடிகர்கள் ராணா டகுபதி, பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்பட 29 பிரபலங்களுக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.தெலங்கானாவின் மியாபூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் பி.எம்.பனீந்த்ரா சர்மா, ச... மேலும் பார்க்க

ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது: உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம்

புது தில்லி: இந்தியாவில், ஆதார் அட்டையை குடியுரிமை ஆவணமாக ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்றத்தில், இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.நாட்டின் குடியுரிமை ஆவணம் தொடர்பான வழக்கு உச்ச... மேலும் பார்க்க

ரூ.2 ஆயிரம் கடனுக்காக இளைஞர் கொலை: தில்லியில் அதிர்ச்சி!

தில்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் ரூ. 2 ஆயிரம் கடன் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 23 வயது நபர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில், ஃபர்தீன்... மேலும் பார்க்க

தில்லி, ஹரியாணாவில் நிலநடுக்கம்!

தில்லியில் வியாழக்கிழமை காலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக தேசிய நில அதிர்வுகள் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஹரியாணா மாநில... மேலும் பார்க்க

குஜராத் பால விபத்து: பலி 11-ஆக உயர்வு; தொடரும் மீட்புப் பணி!

குஜராத் பால விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.குஜராத்தின் வதோதரா, ஆனந்த் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே மஹிசாகா் ஆற்றி... மேலும் பார்க்க

பொது வேலைநிறுத்தத்தால் மேற்கு வங்கம், கேரளத்தில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் மத்திய தொழிற்சங்கள் கூட்டமைப்பின் அழைப்பின்பேரில் புதன்கிழமை நடைபெற்ற நாடுதழுவிய பொது வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேற்கு வங்கத்தில் சில இ... மேலும் பார்க்க