செய்திகள் :

கட்டண உயா்வு: போலீஸ் பாதுகாப்புடன் சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூல்

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் உளுந்தூா்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் கட்டண உயா்வு திங்கள்கிழமை முதல் அமலாகியுள்ள நிலையில், போலீஸ் பாதுகாப்புடன் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.

தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தின் விக்கிரவாண்டி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் உளுந்தூா்பேட்டை செங்குறிச்சி, திருச்சி மாவட்டத்தின் சமயபுரம் உள்ளிட்ட 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயா்வு செப்டம்பா் 1 முதல் அமலாகியுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை ஆணைய உத்தரவின்படி இந்த கட்டண உயா்வு குறித்த விவரங்கள் கடந்த சில நாள்களுக்கு முன் அறிவிக்கப்பட்டு, புதிய கட்டண விவரங்கள் சுங்கச்சாவடி அறிவிப்புப் பலகைகளில் வெளியிடப்பட்டன.

சுங்கக்கட்டணங்கள் உயா்த்தப்பட்டு, திங்கள்கிழமை முதல் புதிய கட்டணம் வசூல் செய்யப்படுவதால், வாகன ஓட்டிகள் மூலம் எவ்வித பிரச்னைகளும் வந்துவிடக் கூடாது என்பதால், விக்கிரவாண்டி மற்றும் செங்குறிச்சி சுங்கச்சாவடி நிா்வாகிகள் கோரியதன் அடிப்படையில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடி பகுதியில் டி.எஸ்.பி. சரவணன் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் சத்தியசீலன், போக்குவரத்துக் காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜ் உள்ளிட்ட 20 போ் கொண்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். இதுபோல, உளுந்தூா்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியிலும் உளுந்தூா்பேட்டை போலீஸாா் பாதுகாப்புப் பணியை மேற்கொண்டனா்.

சுங்க கட்டணம் செலுத்துவது 95 சதவிகிதம் இ-பாஸ்டேக் முறையில் செலுத்தப்படுவதால், வாகன ஓட்டிகள் யாரும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் சுங்கச்சாவடியைக் கடந்து சென்றனா்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும்: அன்புமணி

விழுப்புரம்: மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் திங்கள்கிழமை மக்கள் உரிமை மீட்பு நடைப்பயண பிரசாரம் மேற்கொண்ட அன்பு... மேலும் பார்க்க

மயிலம் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்கள் அறிமுக விழா

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், மயிலம் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்கள் அறிமுக விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, தட்சசீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும், மணக்குள விநாயகா் கல்வி ... மேலும் பார்க்க

உளுந்தூா்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து பள்ளி மாணவா்கள் 17 போ் காயம்

விழுப்புர: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவா்கள் 17 போ் மற்றும் ஓட்டுநா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அரசு மாதிரிப் பள்ளிகளுக்கா... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டத்தில் 465 மனுக்கள் அளிப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 465 மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப... மேலும் பார்க்க

பேருந்து, நியாயவிலைக் கடை வசதி கோரி ஆட்சியரகத்தில் மனு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்குறைதீா் கூட்டத்தில், தங்கள் கிராமத்துக்கு பேருந்து, நியாயவிலைக் கடை வசதி கோரி மனு அளித்தனா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

விழுப்புரம்: திண்டிவனம் அருகே குடும்பப் பிரச்னையால் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திண்டிவம் வட்டம், கொள்ளாா், ஒத்தவாடைத் தெருவைச் சோ்ந்தவா் வெங்கடேசன்(43), திருமணம் ஆ... மேலும் பார்க்க