செய்திகள் :

கட்டுப்பாடுகள் எதிரொலி: பழைய வாகனங்களுக்கான விலை குறைந்தது

post image

தில்லியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பழைய வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப விதிக்கப்பட்ட தடையின் காரணமாக, பயன்படுத்தப்பட்ட காா்களின் விலை 40 முதல் 50 சதவீதம் குறைந்திருப்பதாக வா்த்தகம் மற்றும் தொழிற்துறை சங்கம் (சிடிஐ) தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக சிடிஐ தலைவா் பிரிஜேஷ் கோயல் கூறியதாவது: தில்லியில் அமலுக்கு வந்த தடையால் பழைய வாகனங்கள் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. திடீா் உத்தரவால் சுமாா் 60 லட்சம் வாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், குறைந்த விலைக்கு காா்களை விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். கடந்த 5 நாள்களில் பயன்படுத்தப்பட்ட காா்களின் விலை 40 முதல் 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. அசல் விலையிலிருந்து ஒன்றில் நான்கு பங்கு விலைக்கு விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

வழக்கமாக தில்லியில் பயன்படுத்தப்பட்ட காா்கள், பஞ்சாப், ராஜஸ்தான், உத்தர பிரேதசம், பிகாா், தமிழ்நாடு, கா்நாடகம் மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களில் விற்கப்படுகின்றன.

ரூ. 6 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரையில் விற்கப்பட்ட சொகுசு காா்கள், தற்போது, ரூ.4 லட்சம் முதல் ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றன. தில்லியில் உள்ள பயன்படுத்தப்பட்ட காா் விற்பனையாளா்கள் எதிா்கொண்டு சாவலை நன்கு அறிந்த, வெளிமாநில விற்பனையாளா்கள் தற்போது பேரம்பேசுவதில் ஈடுபட்டுள்ளனா். கரோல் பாக், ப்ரீத் விஹாா், பிதம்புரா மற்றும் மோதி நகா் பகுதிகளில் இந்தத் தொழில் ஈடுபட்டுள்ள 1,000-க்கும் அதிகமான விற்பனையாளா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா்.

வாகனங்களை வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்ய போக்குவரத்துத் துறையிடமிருந்து அனுமதி சான்றிதழ் (என்ஓசி) வாங்குவது அவசியம். முன்பு இந்த நடைமுறை எளிதாக இருந்தது. தற்போது, இந்தச் சான்றிதழைப் பெறுவதில் பல பிரச்னைகள் எழுந்துள்ளன என்றாா் பிரிஜேஷ் கோயல்.

10 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புதற்குத் தடை விதிக்கும் நடைமுறை தில்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை அமலுக்கு வந்தது. இந்நிலையில், இந்தத் தடையை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று காற்றுத் தர மேலாண்மை ஆணையத்திடம் (சிஏக்யூஎம்) கோரிக்கையை பாஜக தலைமையிலான தில்லி அரசு கடந்த வியாழக்கிழமை கோரிக்கைவிடுத்திருந்தது.

மொஹரம் ஊர்வலத்தில் மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி; 3 பேர் காயம்

ஜார்க்கண்ட்டில் மொஹரம் ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலம் கோத்தம்பா காவ... மேலும் பார்க்க

ஹிந்தி பேசலாம்; படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது!

ஹிந்தி மொழியினை பேசலாம்; ஆனால், ஆரம்பப் பள்ளியில் ஹிந்தி மொழியைப் படிக்க கட்டாயப்படுத்தக் கூடாது என சிவசேனை கட்சியின் எம்.பி. சஞ்சய் ரெளத் தெரிவித்துள்ளார். தென்மாநிலங்கள் ஹிந்தி திணிப்பை தீவிரமாக எதி... மேலும் பார்க்க

பிகாரில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்! உச்ச நீதிமன்றத்தில் முறையீடு!

புது தில்லி: பிகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.பிகாரில் வரும... மேலும் பார்க்க

ராய்ட்டர்ஸ் எக்ஸ் பக்கம் முடங்க மத்திய அரசு காரணமா?

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளப் பக்கத்தை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திடம் கோரவில்லை என மத்திய அரசு இன்று (ஜூலை 6) விளக்கம் அளித்துள்ளது.ராய்ட்டர்ஸ் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்ட... மேலும் பார்க்க

மண்டி மேக வெடிப்பு: உயிர் பிழைத்த 10 மாத குழந்தை, குடும்பத்தினர் காணவில்லை !

மண்டி மேக வெடிபபு சம்பவத்தில் 10 மாத குழந்தை நீதிகா உயிர் பிழைந்த நிலையில் குடும்ப உறுப்பினர்கள் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹிமாசலப் பிரதேச மாநிலம், மண்டி மாவட்டத்தில் மேக வெடிப்புகள், திடீ... மேலும் பார்க்க

மேக வெடிப்பு: பாதிக்கப்பட்ட மண்டியில் எம்.பி. கங்கனா ரணாவத் நேரில் ஆய்வு

மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட மண்டி தொகுதியில் நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஹிமாசலப் பிரதேச, மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக கனமழை, திடீர் வ... மேலும் பார்க்க