செய்திகள் :

கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரப் புத்தகங்கள்: முதல்வர் வெளியிட்டார்!

post image

பொதுப்பணித்துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள
கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரப் புத்தகங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (மார்ச் 27) தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறை சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள 8 தொகுதிகள் கொண்ட கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரப் புத்தகங்களை வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் கட்டுமானம் மற்றும் பொறியியல் பணிகள் பல்வேறு துறைகள் மூலம் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு துறையிலும் அத்துறைக்கு ஏற்ப பணிகளை மேற்கொள்ள ஏதுவாக துறைவாரியாக தரவு விவரப் புத்தகங்கள் தனித்தனியாக பயன்பாட்டில் உள்ளது.  

1984-ஆம் ஆண்டு பொதுப்பணித் துறைக்கென கட்டுமானப் பணிக்களுக்கான தரவு விவரப் புத்தகம் திருத்தியமைக்கப்பட்டு, இன்று வரை பயன்பாட்டில் இருந்து வருகிறது. எனவே, இதை உணர்ந்து தற்போது தமிழ்நாடு அரசு அனைத்து பொறியியல் துறைகளும் உபயோகிக்கும் வண்ணம் ஒருங்கிணைந்த கட்டுமானப் பணிக்களுக்கான தரவு விவரப் புத்தகம் தயாரிக்க, பொதுப்பணித்துறை முதன்மைத் தலைமைப் பொறியாளர் மற்றும் தலைமைப் பொறியாளர் (பொது), தலைமையில் அனைத்து பொறியியல் துறைகளின் தலைமைப் பொறியாளர்கள் உறுப்பினர்களாகவும் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது.

காலப்போக்கில் பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக கட்டுமானங்கள், நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் மற்றும் நவீன கட்டுமான முறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாற்றங்களை கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரங்களின் மூலம் மதிப்பீட்டுத் தொகையினை ஒரே மாதிரியாக அனைத்து பொறியியல் கட்டுமானத் துறைகளிலும் மேற்கொள்ளும் வகையில், இக்குழு பலமுறை கூடி விரிவான விவாதங்களுக்குப் பிறகு, தொகுதி – 1 பொதுப்பணித்துறை, தொகுதி-2 பொதுப்பணித் துறை மற்றும் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை, தொகுதி-3 நெடுஞ்சாலைத்துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தொகுதி 4, 5, 6, 7 & 8 - சென்னை பெருநகர குடிநீர்  மற்றும்  கழிவுநீர் வாரியம் ஆகிய 8 தொகுதிகள் கொண்ட கட்டுமானப் பணிகளுக்கான தரவு விவரப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இது கட்டுமானப் பொறியியல் துறைகள் அனைத்தும், எளிதான முறையில் மதிப்பீடு தயாரிக்க பெரிதும் பயன்படும்.

பொதுப்பணித் துறைக்கான கட்டுமானப் பணிக்களுக்கான இப்புதிய தரவு விவரப்  புத்தகங்கள்,  40 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கட்டுமானத் துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் மற்றும் வளர்ச்சியை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இத்தரவு விவரப் புத்தகங்களின் வாயிலாக அனைத்துவிதமான கட்டுமானப் பணிகளுக்கு தேவையான கட்டுமான பொருள்கள், வேலையாள்கள், இயந்திரங்கள் போன்றவற்றின் விரிவான விவரங்களை அறிந்து கொள்ள இயலும். 

இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர்
எ.வ. வேலு, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பொதுப்பணித் துறை செயலாளர் ஜெ. ஜெயகாந்தன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிக்க: திண்டுக்கல் காசம்பட்டி கோயில் காடுகள், பல்லுயிர் பாரம்பரிய தலமாக அறிவிப்பு!

டாஸ்மாக்: அரசின் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் -அமலாக்கத்துறை

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் மாா்ச் 6 முதல் 8 வரை சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ... மேலும் பார்க்க

ஏப்.3 முதல் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

தமிழகத்தில் ஏப்ரல் 3 முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட தகவலில், அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை: தென்மேற்கு ... மேலும் பார்க்க

தமிழகத்தில் 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு! தஞ்சை சாதனை: சஞ்சய் காந்தி

தஞ்சாவூர்: தமிழகத்தில் இதுவரை 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதில் தஞ்சை மாவட்டம் சாதனை படைத்திருப்பதாகவும் வழக்குரைஞர் சஞ்சய் காந்தி கூறியுள்ளார்.கும்பகோணம் வெற்றிலை, க... மேலும் பார்க்க

தலைநகரை சென்னையிலிருந்து திருச்சிக்கு மாற்ற வேண்டும்: பேரவையில் காரசாரம்

தமிழகத்தின் தலைநகரை மாற்ற வேண்டும் என பாஜக எம்எல்ஏ வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் தலைநகரை சென்னைக்கு மாற்ற வேண்டும் என அவைத் தலைவர் கோரிக்கை வைத்ததால் அவையில் கலகலப்பான சூழல் ஏற்பட்டது.தமிழ... மேலும் பார்க்க

நீலகிரி செல்வோர் கவனத்துக்கு... திருப்பி அனுப்பப்படும் வாகனங்கள்!

நீலகிரிக்கு வருகை தரும் வாகனங்களுக்கு இன்று(ஏப்ரல் 1) முதல் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்ட நிலையில், இ-பாஸ் பெறாத வாகனங்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.நீலகிரியில் அளவுக்கு அதிகமான வாகனங்... மேலும் பார்க்க

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு

சென்னை: தமிழகத்தின் பெருமைமிகு வேளாண் உற்பத்திப் பொருள்களில் முக்கியமானதாக விளங்கும் கும்பகோணம் வெற்றிலை மற்றும் தோவாளை மாணிக்க மாலை ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.ஒரு குறிப்பிட்ட ப... மேலும் பார்க்க