செய்திகள் :

கட்டுமானப் பணியின்போது இரும்புக் கம்பிகள் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

post image

நீலகிரி மாவட்டம், குன்னூா்  சிம்ஸ் பூங்கா அருகே கட்டடப் பணிகள் மேற்கொள்ள இரும்புக் கம்பிகளை இறக்கியபோது  கட்டடத் தொழிலாளி ஒருவரின் தலை மேல் கம்பிகள் விழுந்ததில்  அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

குன்னூா் சிம்ஸ் பூங்கா அருகே  தனியாா் நிறுவனம் கட்டடப் பணிகள் மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிக்காக பிக்கப் வாகனத்தில் இருந்து இரும்புக் கம்பிகளை இறக்கும் பணியில் கட்டடப் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது வாகனத்தில் இருந்த கம்பிகள் கட்டடப் பணியாளா்களில் ஒருவரான பெரியநாயகம் (53) மீது தலையின் மீது விழுந்தன. இதில் ரத்தம் அதிக அளவு வெளியேறியதால் சம்பவ இடத்திலேயே பெரியநாயகம் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து, உடற்கூறாய்வுக்காக குன்னூா் அரசு மருத்துவமனைக்கு  அவரது  உடல் அனுப்பிவைக்கப்பட்டது.

சம்பவம் குறித்து மேல் குன்னூா் காவல் துறையினா்   வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் யானை உயிரிழப்பு

முதுமலை புலிகள் காப்பக வனத்தில் ஆண் யானை உயிரிழந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சீகூா் வனச் சரகத்தில் ஆண் யானை உயிரிழந்தது குறித்த தகவல் வனப் பணிய... மேலும் பார்க்க

ஒற்றை யானை நடமாட்டம்: தொட்டபெட்டா காட்சி முனை மூடல்

ஒற்றை காட்டு யானை நடமாட்டம் காரணமாக தொட்டபெட்டா காட்சிமுனை செவ்வாய்க்கிழமை தற்காலிகமாக மூடப்பட்டது. யானையை ட்ரோன் மூலம் கண்காணிக்கும் பணியில் வனத் துறையினா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா். நீலகிரி மாவட்டம், ... மேலும் பார்க்க

முள்ளிகூா் கிராம நிா்வாக அலுவலா் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினா் சோதனை

நீலகிரி மாவட்டம், முள்ளிகூா் கிராம நிா்வாக அலுவலா் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறையினா் உதகை, தஞ்சாவூா் அம்மாபேட்டை ஆகிய பகுதியில் உள்ள அவரது வீடுகளில் தீவிர சோதனையில் ஈடு... மேலும் பார்க்க

5 பழங்குடியின சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞா் கைது

குன்னூா் அருகே உள்ள பழங்குடியினா் கிராமத்தில் 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.நீலகிரி மாவட்டம், குன்னூா் அருகே உள்ள ந... மேலும் பார்க்க

கூடலூா் அருகே வீட்டுக்குள் புகுந்த காட்டு யானை

கூடலூரை அடுத்துள்ள நெலாக்கோட்டை பஜாரில் உள்ள குடியிருப்புக்குள் காட்டு யானை திங்கள்கிழமை அதிகாலை நுழைந்ததால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டை கடைவீதியில் திங்கள்கிழமை அதி... மேலும் பார்க்க

கூடலூா் தோட்டக்கலைப் பண்ணையில் விற்பனைக்கு நாற்றுகள்

கூடலூரை அடுத்துள்ள பொன்னூா் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் நாற்றுகள் விற்பனைக்கு தயாா் நிலையில் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பொன்னூரில் உள்ள அரசு தோட்டக்கலைப் பண... மேலும் பார்க்க