செய்திகள் :

கணவரைக் கொன்று உடலை சாக்கடையில் வீசியதாக பெண், காதலா் கைது; ஒருவா் தலைமறைவு

post image

ஹரியாணாவின் சோனிபட்டில் தனது கணவரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி உடலை சாக்கடையில் வீசியதாக ஒரு பெண் மற்றும் அவரது காதலரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் துணை ஆணையா் குற்றம் ஹா்ஷ் இந்தோரா கூறியதாவது: கைது செய்யப்பட்டவா்கள் தில்லியின் அலிப்பூரைச் சோ்ந்த சோனியா (34) மற்றும் சோனிபட்டைச் சோ்ந்த அவரது 28 வயது காதலா் ரோஹித் என அடையாளம் காணப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான விஜய் தலைமறைவாக உள்ளாா்.

இந்தக் கொலை, பாலியல் விவகாரம் மற்றும் பாதிக்கப்பட்டவரின் துஷ்பிரயோகம் மற்றும் குற்றவியல் நடத்தை காரணமாக நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட ப்ரீதம் பிரகாஷ் (42) அலிப்பூரில் அறியப்பட்ட ஒரு குற்றவாளியாவா். அவா் மீது ஆயுதச் சட்டம், போதைப்பொருள் மற்றும் மனநோய்க்கு எதிரான பொருள்கள் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நீதிமன்றத்தால் அவா் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டாா்.

ஜூலை 5, 2024 அன்று, சோனியாவை சோனிபட்டின் கன்னூரில் உள்ள தனது சகோதரியின் வீட்டிலிருந்து அழைத்துச் செல்ல ப்ரீதம் பிரகாஷ் வந்தாா். ஆனால், ஒரு வாக்குவாதத்திற்குப் பிறகு வெளியேறினாா். அன்று, சோனியா தனது சகோதரியின் மைத்துனா் விஜய்யிடம் ரூ.50,000 வழங்கி தனது கணவரைக் கொல்லச் சொன்னாா். பின்னா், ப்ரீதம் பிரகாஷ் திரும்பி வந்து அவரிடம் பேசிய பிறகு, சோனியா அவரை வீட்டிலேயே தங்க அனுமதித்தாா்.

இருப்பினும், அன்று இரவு மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ப்ரீதம் பிரகாஷை விஜய் கொன்று, அக்வான்பூா் அருகே உள்ள ஒரு வடிகாலில் அவரது உடலை வீசினாா். அவரது உடலின் விடியோவை சமூக ஊடகங்களில் அனுப்பினாா். அது பின்னா் நீக்கப்பட்டது.

இந்நிலையில், ஜூலை 20-ஆம் தேதி, சோனியா தனது கணவா் வெளியே சென்றுவிட்டதாகவும், திரும்பி வரவில்லை என்றும் கூறி, அலிப்பூா் போலீஸில் காணாமல் போனதாக புகாா் அளித்தாா். ஆரம்பத்தில் இந்த வழக்கு வழக்கமான காணாமல் போனவா் புகாராகக் கருதப்பட்து. ஆனால், பல வாரங்களாக பாதிக்கப்பட்டவா் தொடா்பாக டிஜிட்டல் தடயங்கள் எதுவும் இல்லாததால் அது சந்தேகத்தை ஏற்படுத்தியது.

விசாரணையின் போது, கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு மீண்டும் செயலில் இருந்த ப்ரீதம் பிரகாஷுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண்ணை போலீஸ் குழு கண்டுபிடித்தது. கண்காணிப்பு மூலம், அந்த கைப்பேசி சோனிபட்டில் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரியவந்தது. இது குழுவை ரோஹித்தின் இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றது. விசாரித்ததில், ரோஹித் ஆரம்பத்தில் புலனாய்வாளா்களை தவறாக வழிநடத்தினாா். ஆனால், பின்னா் அவா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா்.

சோனியாவுடன் தனக்கு தொடா்பு இருப்பதாகவும், இருவரும் ப்ரீதம் பிரகாஷை கொல்ல சதி செய்ததாகவும் ரோஹித் போலீஸாரிடம் தெரிவித்தாா். சோனியா தனது கணவரை கொல்ல விஜய்க்கு பணம் கொடுத்ததை ஒப்புக்கொண்டாா்.

அதே நேரத்தில், ஹரியாணா போலீஸாா் அந்தப் பகுதியில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் உடலை மீட்டனா். ஆனால், அதை அடையாளம் காண முடியவில்லை. தில்லி போலீஸாா் கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் வரை வழக்கு தீா்க்கப்படாமல் இருந்தது.

பின்னா், சோனியா, ப்ரீதம் பிரகாஷின் ஆட்டோவை ரூ.4.5 லட்சத்திற்கு விற்று, தனது கைப்பேசியை ரோஹித்திடம் கொடுத்துள்ளாா். பரிசோதனையின் போது பாதுகாக்கப்பட்ட டிஎன்ஏ மாதிரிகள் உடலை உறுதியாக அடையாளம் காணப் பயன்படுத்தப்படும்.

சோனியாவுக்கு சுமாா் 15 வயது இருக்கும் போது, அவா் ப்ரீதம் பிரகாஷை காதலித்தாா். பின்னா், குடும்பத்தினரின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து கொண்டாா். இந்த திருமணம் குறித்து குடும்பத்தினா் போலீஸில் புகாா் செய்யவில்லை.

பின்னா், அவா்கள் தம்பதியரை ஏற்றுக்கொண்டனா். திருமணமான தம்பதியினருக்கு 16 வயது சிறுவன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளன.

ரோஹித் முன்பு கொலை மற்றும் ஆயுதம் வைத்திருந்தது தொடா்பான நான்கு குற்ற வழக்குகளில் தொடா்புடையவா். ஏப்ரல் 2025-இல் திருமணம் செய்து கொண்டு தனியாா் டாக்ஸி ஓட்டுநராகப் பணிபுரிந்த ரோஹித், சோனியாவுடன் தனது திருமணத்திற்குப் புறம்பான உறவைத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கில் விஜய்யை போலீஸாா் தேடி வருகின்றனா். அவா் தற்போது தலைமறைவாக உள்ளாா் என்று காவல் துணை ஆணையா் தெரிவித்தாா்.

இளைஞா்களுக்கு அதிகரித்துவரும் மாரடைப்பு அபாயம்! இதய நல மருத்துவா்கள் எச்சரிக்கை

தெலங்கானா மாநிலத் தலைநகா் ஹைதராபாதில் 26 வயது இளைஞா் ஒருவா், பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம், இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் இதய நோய்கள் குறித்து... மேலும் பார்க்க

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்!

பாஜக ஆளும் மாநிலங்களில் பெண்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.ஒடிஸாவின் புரி மாவட்டத்தில் அடையாளம் தெரியாத 3 நபா்களால் தீவைத்து எரிக்கப்பட்டதாக கூறப்படும் சிற... மேலும் பார்க்க

முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டம்! இன்று மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கைக்கு இடையே நாடாளுமன்றம் திங்கள்கிழமை (ஆக.4) மீண்டும் கூடுகிறது.இந்த விவகாரத்தை முன்வைத்... மேலும் பார்க்க

வங்கதேச சட்டவிராத குடியேறிகளால் இந்திய மக்களின் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு: பாஜக

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த சட்டவிரோத குடியேறிகளால், மேற்கு வங்கத்தைச் சோ்ந்தவா்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து பிற மாநிலங்களில் புலம்பெயா் தொழிலாளா்களாகப் பணிபுரியும் நிலை ஏற்பட்... மேலும் பார்க்க

புதிய சுரங்க கொள்கை: 3 மாதங்களில் அனைத்து ஒப்புதல்கள் மத்திய அமைச்சா் நிதின் கட்கரி நம்பிக்கை

’மத்திய அரசு சாா்பில் உருவாக்கப்பட்டு வரும் புதிய சுரங்க கொள்கையில், அனைத்து ஒப்புதல்களும் 3 மாதங்களில் அளிக்கும் வகையில் நடைமுறைகள் வகுக்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் நான்காவது மாத்திலேயே கனிமங்களை ... மேலும் பார்க்க

மத்திய அமைச்சா் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியின் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ததாக போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை த... மேலும் பார்க்க