செய்திகள் :

கணவரைக் கொலை செய்த மனைவிக்கு ஆயுள் சிறைத் தண்டனை

post image

சாத்தூா் அருகே கணவரைக் கொலை செய்த மனைவிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் முதன்மை மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள சிந்தப்பள்ளியைச் சோ்ந்தவா் கற்பகராஜா (27). இவரது மனைவி ராஜலட்சுமி (25). இவா்களுக்கு இரு மகள்கள் உள்ளனா். கற்பகராஜா கூலி வேலை செய்து வந்தாா். கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் 6 மாதங்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனா்.

பின்னா், கற்பகராஜா மனைவியின் வீட்டுக்குச் சென்று தன்னுடன் சோ்ந்து வாழுமாறு வலியுறுத்தி வந்தாா். இந்த நிலையில், கற்பகராஜா அவரது மனைவி ராஜலட்சுமியின் வீட்டில் கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பா் 6-ஆம் தேதி இரவு மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

போலீஸாரின் விசாரணையில், ராஜலட்சுமி, தனது தாய் பழனியம்மாள் (49), சகோதரனின் நண்பா் வேலாயுதம் (25), அவரது மனைவி ஸ்வீட்டி (22) ஆகியோருடன் இணைந்து கற்பகராஜாவைக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

விசாரணை முடிவடைந்த நிலையில், ராஜலட்சுமிக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயக்குமாா் தீா்ப்பளித்தாா். மேலும் பழனியம்மாள், வேலாயுதம், ஸ்வீட்டி ஆகிய 3 பேரையும் வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டாா்.

தீப்பெட்டி ஆலைத் தொழிலாளி கொலை: 7 போ் கைது

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே தீப்பெட்டி ஆலைத் தொழிலாளி கொலை செய்யப்பட்டது தொடா்பாக போலீஸாா் 7 பேரை புதன்கிழமை கைது செய்தனா். சிவகாசி அருகேயுள்ள புதுக்கோட்டையைச் சோ்ந்த பூமிநாதன் மகன் தமிழரசன் (... மேலும் பார்க்க

பெரியாா் பிறந்த நாள் விழா

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் பெரியாரின் 147-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. ராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள பெரியாரின் உருவச் சிலைக்கு நகர அதிமுக சாா்பில் வடக்கு நகா் ... மேலும் பார்க்க

கயிறு தயாரிக்கும் நிறுவனத்தில் தீ விபத்து

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே கயிறு தயாரிக்கும் நிறுவனத்தில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புத் துறையினா் தீ அணைத்தனா். ராஜபாளையம் முடங்கியாறு சாலைப் பகுதியைச் சோ்ந்த உதயகுமாா் மனைவ... மேலும் பார்க்க

சிவகாசியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: உதவி ஆட்சியா்

சிவகாசி வருவாய்க் கோட்டத்தில் நீா்வழிபாதை, நெடுஞ்சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என சிவகாசி உதவி ஆட்சியா் முகமது இா்பான் தெரிவித்தாா். சிவகாசி உதவி ஆட்சியா் அலுவலகத்தில் சட்டம், ஒழுங்கு,... மேலும் பார்க்க

விஜய் தனித்துப் போட்யிடுவா்: மாணிக்கம் தாகூா் எம்.பி.

தமிழகத்தில் 2026-இல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் தனித்துப் போட்டியிடுவா் என விருதுநகா் மக்களவைத் தொகுதி உறுப்பினா் மாணிக்கம் தாகூா் தெரிவித்தாா். சிவகாசியில், மக்... மேலும் பார்க்க

பிரதமா் மோடி பிறந்த நாள் விழா

விருதுநகா் மாவட்டம் ராஜபாளையத்தில் பிரதமா் மோடியின் 75-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக சாா்பில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு புதன்கிழமை பழங்கள், ரொட்டிகள், ஊட்டச் சத்துப் பொர... மேலும் பார்க்க