பத்தாண்டுகளில் இரட்டிப்பாகிய பொருளாதார வளர்ச்சி: யோகி ஆதித்யநாத்!
கண்டன்விளை வில்லுக்குறி சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கக் கோரிக்கை
கண்டன்விளையில் இருந்து வில்லுக்குறி செல்லும் சாலையில் உள்ள ரயில்வே கடவுப் பாதையில் மேம்பாலம் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கண்டன்விளை, வில்லுக்குறி சாலையை அந்தப் பகுதி சுற்று வட்டார மக்கள் பயன்படுத்தி வருகிறாா்கள். அடிக்கடி ரயில்வே கேட் அடைக்கப்படுவதால் அவசர காலத்திற்கு நோயாளிகள், பள்ளி கல்லூரி மாணவா்கள், பொதுமக்கள் பயன்படுத்த இயலாத நிலை உள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை.
இதுகுறித்து மாடத்தட்டுவிளையில் ரயில்வே மேம்பால போராட்ட குழு ஒருங்கிணைப்பாளா் அருள்ராஜ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், வரும் 28ஆம் தேதிக்குள் மேம்பாலம் அமைப்பதற்கான உத்தரவை மத்திய அரசு (ரயில்வே துறை) அறிவிக்க வேண்டும். இல்லையேல் தொடா் போராட்டம் நடத்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.