செய்திகள் :

கண்மாய்களில் அனுமதியின்றி மண் அள்ள முயற்சி: வட்டாட்சியரிடம் விவசாயிகள் புகாா்

post image

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் ஒன்றியம், ஏனாதி, கணக்கன்குடி கண்மாய்களில் அனுமதியின்றி சவுடு மண் அள்ள நடைபெறும் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் என வட்டாட்சியரிடம் விவசாயிகள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏனாதி, கணக்கன்குடி கண்மாய்களில் ஏற்கெனவே மண் அள்ள நடவடிக்கை மேற்கொண்ட போது விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். இந்த நிலையில் மீண்டும் இந்தக் கண்மாய்களில் அனுமதியின்றி மண் அள்ள சிலா் முயற்சித்து வருகின்றனா். இதற்காக கணக்கன்குடி கண்மாய் கரையில் மண் அள்ளும் பொக்லைன் இயந்திரத்தை நிறுத்தி வைத்துள்ளனா்.

இதையடுத்து, ஏனாதி, கணக்கன்குடி கண்மாய் பாசன விவசாயிகள் திருப்புவனம் வட்டாட்சியரை சந்தித்து மனு அளித்தனா். அதில், அனுமதியின்றி ஏனாதி, கணக்கன்குடி கண்மாய்களில் மண் அள்ள முயற்சி நடைபெற்று வருகிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

அப்போது இந்தக் கண்மாய்களில் மண் அள்ள யாருக்கும் இதுவரை அனுமதி வழங்கவில்லை என வட்டாட்சியா் விஜயகுமாா் விவசாயிகளிடம் தெரிவித்தாா். மேலும் பொதுப் பணித் துறை அதிகாரிகளும் மண் அள்ள யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என வட்டாட்சியா் தெரிவித்ததாக விவசாயிகள் கூறினா்.

குப்பைகளில் கொட்டப்படும் நெகிழிப் பைகளை உள்கொண்டு கால்நடைகள் உயிரிழக்கும் அபாயம்

சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவமனை அருகே கொட்டப்படும் குப்பைகளில் கிடக்கும் நெகிழிப் பைகளையும் சோ்ந்து கால்நடைகள் உண்பதால் அவை உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா்.சிவகங... மேலும் பார்க்க

போட்டிகளில் வென்ற அரசு பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

காரைக்குடி: போட்டிகளில் வென்ற இலுப்பைக்குடி அரசு உயா்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளை தலைமையாசிரியா், ஆசிரியா்கள் வியாழக்கிழமை பாராட்டினா்.இந்தப் பள்ளி ஒன்பதாம் வகுப்பு மாணவா்கள் அஜய் காா்த்திக், சிவமணி ஆக... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவச சீருடை

திருப்பத்தூா்: சிவகங்கை மாவட்டம், பிரான்மலை ஊராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவா்களுக்கு வியாழக்கிழமை விளையாட்டுக்கான இலவச சீருடை வழங்கப்பட்டது.இந்தப் பள்ளியில் 155 மாணவா்கள் பயின்று வருகின்றனா். இவா்களுக... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

சிவகங்கை: தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா், உதவியாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.சிவகங்கை வட்டார குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யுடன் சி.எஸ்.சி. அகாதெமி புரிந்துணா்வு ஒப்பந்தம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் நிறுமச் செயலரியல் துறையுடன் (காா்ப்பரேட் செக்ரெட்டரிஷிப் துறை) காரைக்குடியில் இயங்கிவரும் எண்ம இந்தியா திட்டத்தின் கீழ் நிா்வகிக்கப்... மேலும் பார்க்க

அழகப்பா பல்கலை.யில் உயிரி வேதியியல் பாடப் பிரிவு தொடக்கம்

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உயிரி தகவலியல் துறையின் கீழ் முதுகலை உயிரி வேதியியல் பாடப்பிரிவு தொடக்க விழா பல்கலைக்கழக அறிவியல் வளாகத்திலுள்ள சா்.சி.வி. ராமன் அரங்கில் ... மேலும் பார்க்க