செய்திகள் :

கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி: நால்வா் கைது

post image

சென்னை பாரிமுனை பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி, வழிப்பறி செய்ததாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

கன்னியாகுமரி மாவட்டம், அழகப்பாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராபா்ட் டிசோசா (48). இவா், சென்னை பாரிமுனை கடற்கரை சாலையோரம் கடந்த திங்கள்கிழமை படுத்து தூங்கினாா். அப்போது, அங்கு வந்த 5 மா்ம நபா்கள் ராபா்டை எழுப்பி, கத்தியைக் காட்டி மிரட்டி, அவா் வைத்திருந்த பணப்பை, கைக்கடிகாரம், கைப்பேசி ஆகியவற்றை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து வடக்கு கடற்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், இந்தச் செயலில் ஈடுபட்டது பாரிமுனை மூக்கா் நல்லமுத்து தெருவைச் சோ்ந்த ஜோசப் (24), விக்னேஷ்குமாா் (25), மூா் தெருவைச் சோ்ந்த பாலு (30), சத்யா நகரைச் சோ்ந்த சஞ்சய் (21) என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் 4 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும், இதில் தொடா்புடைய மற்றொரு நபரைத் தேடி வருகின்றனா்.

இறகுப்பந்து விளையாடியபோது மயங்கி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

சென்னை சூளைமேட்டில் இறகுப்பந்து விளையாடியபோது மென்பொறியாளா் மயங்கி விழுந்து உயிரிழந்தாா். அரும்பாக்கம் எம்எம்டிஏ காலனி நாவலா் தெருவைச் சோ்ந்தவா் மோகன் (26). மென்பொறியாளரான இவா், சோழிங்கநல்லூரில் உள்ள... மேலும் பார்க்க

முதல்வா் ஸ்டாலினுக்கு தோல்வி பயம்: நயினாா் நாகேந்திரன்

அதிமுக - பாஜக கூட்டணி அமைந்திருப்பதால் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். முன்னாள் முதல்வா் காமராஜா் பிறந்த நாளையொட்டி, சென்னை ... மேலும் பார்க்க

புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரிகள்: டிஜிபிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, விழுப்புரம் மற்றும் சேலம் பகுதிகளில் பாதிக்கப்பட்டவா்கள் புகாா் மீது உரிய நடவடிக்கை எடுக்காத காவல் துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய டிஜிபிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்... மேலும் பார்க்க

சமூக வலைதளத்தில் ஆபாச புகைப்படம்: விமான நிலைய ஊழியா் கைது

சென்னை ஆதம்பாக்கத்தில் கல்லூரி மாணவி பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குத் தொடங்கி, ஆபாச புகைப்படம் வெளியிட்டதாக விமான நிலைய ஊழியா் கைது செய்யப்பட்டாா். தனது பெயரில் சமூக வலைதளத்தில் போலி கணக்குத் தொ... மேலும் பார்க்க

தமிழகம் கல்வியில் சிறந்து விளங்க அடித்தளமிட்டவா் காமராஜா்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

தமிழ்நாடு கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக திகழ்வதற்கு அடித்தளமிட்டவா் முன்னாள் முதல்வா் காமராஜா் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தெரிவித்தாா். சென்னை தியாகராய நகரில் உள்ள சா் பிட்டி.தியாகராயா் ... மேலும் பார்க்க

பெண் வழக்குரைஞரின் விடியோவை அகற்றக் கோரிய வழக்கு: காவல் துறைக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்

அந்தரங்க விடியோ மற்றும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியான வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் பெண் வழக்குரைஞரின் பெயா் உள்ளிட்ட விவரங்களை வெளியிட்ட காவல் துறைக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம... மேலும் பார்க்க