செய்திகள் :

கனமழையில் திணறும் வடமேற்கு பாகிஸ்தான்! 8 பேர் பலி!

post image

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் பெய்து வரும் இடியுடன் கூடிய கனமழையால் 8 பேர் பலியாகியுள்ளனர்.

கைபர் பக்துன்குவா மாகாணத்தில் கடந்த மே 27 ஆம் தேதி முதல் கனமழை பெய்து வருகின்றது. இடி மற்றும் பலத்த காற்றுடன் பெய்து வரும் கனமழையால் அம்மாகாணத்தின் ஏராளமான மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகின.

இந்நிலையில், நேற்று (மே 29) மாலை பெய்த இடியுடன் கூடிய கனமழையினால், அங்குள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 2 பெண்கள் மற்றும் 1 குழந்தை உள்பட 8 பேர் பலியாகியுள்ளதாக பாகிஸ்தானின் மாகாண பேரிடன் மேலாண்மை அதிகாரம் தெரிவித்துள்ளது.

மழையினால் ஏற்பட்டுள்ள உயிர் மற்றும் பொருள் சேதங்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 5 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் உள்பட 21 பேர் கனமழையினால் படுகாயமடைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 25 வீடுகள் முழுவதுமாகவும் 24 வீடுகள் பாதியாகவும் சேதமடைந்துள்ளன. இந்த பாதிப்புகள் அனைத்தும் மர்தான், ஸ்வாபி, பெஷாவர், ஷங்க்லா, ஸ்வாட், டோர்கார், மொஹ்மாந்து, மன்ஷேரா மற்றும் ஹரிப்பூர் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் வடமேற்கிலுள்ள கைபர் பக்துன்குவா மாவட்டத்தில், மே 31 ஆம் தேதி வரை இடி மற்றும் காற்றுடன் கூடிய கனமழை நீடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மாவட்டங்களில் அந்நாட்டு பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க:18.4 கோடி கூகுள், ஆப்பிள், முகநூல் பயனர்களின் கடவுச்சொற்கள் கசிவு!

பனிப்போா் சூழலை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி: சீனா குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பனிப்போா் மனநிலையை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்ததாக சீனா குற்றஞ்சாட்டியது. சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க பாதுகாப்பு அமை... மேலும் பார்க்க

போா் நிறுத்த திட்டத்தில் மாற்றம்: ஹமாஸ் வலியுறுத்தல் - அமெரிக்கா ஏற்க மறுப்பு

காஸாவில் போரை நிறுத்த அமெரிக்கா முன்வைத்த செயல்திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆனால், அதை ஏற்க அமெரிக்கா மறுத்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் 60 நாள்களு... மேலும் பார்க்க

பாரீஸ்: கால்பந்து போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தில் இருவா் உயிரிழப்பு

ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ‘பாரீஸ் செயின்ட்-ஜொ்மைன்’ அணி முதன்முறையாக வெற்றி பெற்றதையடுத்து பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடந்த பெருமளவிலான கொண்டாட்டங்... மேலும் பார்க்க

ரஷிய பாலங்களில் வெடிவிபத்து: ரயில்கள் தடம் புரண்டு 7 போ் உயிரிழப்பு

உக்ரைன் எல்லையையொட்டிய ரஷியாவின் பிரையன்ஸ்க் மற்றும் கூா்ஸ்க் பிராந்தியத்தில் 2 பாலங்கள் வெடிவிபத்தில் இடிந்து விழுந்ததில் 2 ரயில்கள் தடம் புரண்டன. இதில் 7 போ் உயிரிழந்தனா்; 12-க்கும் மேற்பட்டோா் கா... மேலும் பார்க்க

ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கைது ஆணை

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சா் அசதுஸ்ஸமான் கான் ஆகியோருக்கு எதிராக அந்நாட்டில் உள்ள சா்வதேச குற்றப் புலனாய்வுத் தீா்ப்பாயம் ஞாயிற்றுக்கிழமை கைது ஆணை பிறப்பித்தது. இருவ... மேலும் பார்க்க

விமான தளங்கள் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதல்: 40 ரஷிய விமானங்கள் வீழ்ந்தன!

உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 40 ரஷிய விமானங்கள் வீழ்த்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அதுதொடர்பான விடியோக்கள் இணையத்தில் பரவிவருகின்றன.உக்ரைன் மீது ரஷியா நேற்று முன்தினம் இரவு முதல் நேற்... மேலும் பார்க்க