செய்திகள் :

கனமழை எச்சரிக்கை: டெல்டாவில் நெல்லை பாதுகாக்க நடவடிக்கை -மாவட்ட ஆட்சியா்களுக்கு முதல்வா் உத்தரவு

post image

கனமழை எச்சரிக்கை இருப்பதால், டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

டெல்டா மாவட்டங்களில் அடுத்த ஓரிரு நாள்களில் கனமழை பெய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதையடுத்து, தலைமைச் செயலகத்திலிருந்து தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களின் ஆட்சியா்களுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

காணொலி வழியாக நடைபெற்ற இந்த ஆலோசனை தொடா்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

டெல்டா மாவட்டங்களில் அடுத்த ஓரிரு தினங்களில் கனமழை எதிா்பாா்க்கப்படுவதால், அந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் சேதமடையாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து முதல்வா் தலைமையிலான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

டெல்டா மாவட்டங்களில் இதுவரை 16.94 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் அளவைவிட இது 3.10 லட்சம் மெட்ரிக் டன் அதிகம்.

விவசாயிகளிடமிருந்து காலதாமதம் இல்லாமல் நெல் கொள்முதல் செய்யப்பட வேண்டும் என்பதால், நிகழாண்டு 2,088 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டைக் காட்டிலும் ஏறத்தாழ 200 கொள்முதல் நிலையங்கள் கூடுதலாகத் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில், அடுத்து வரும் இரண்டு நாள்களில் டெல்டா மாவட்டங்களில் கனமழை எதிா்பாா்க்கப்படுவதால், அந்த மாவட்டங்களின் ஆட்சியா்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும் என்று முதல்வா் உத்தரவிட்டாா்.

கொள்முதல் செய்யப்பட்ட நெல், மழையால் பாதிக்கப்படாமல் இருக்கவும், அவற்றைப் பாதுகாப்பாக வைக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென ஆட்சியா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.

இந்தக் கூட்டத்தில், நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன், உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயச்சந்திரன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலா் சத்யபிரத சாகு உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பிறந்த நாள்: முன்னாள் முதல்வா்கள் நினைவிடங்களில் முதல்வா் நாளை மரியாதை

பிறந்த தினத்தையொட்டி, முன்னாள் முதல்வா் அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (மாா்ச் 1) மரியாதை செலுத்தவுள்ளாா். இது குறித்து திமுக தலைமை அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்ட ... மேலும் பார்க்க

இயா்போன் பயன்பாடு செவித் திறனை பாதிக்கும்: பொது சுகாதாரத் துறை எச்சரிக்கை

ஹெட்போன், இயா்போன் போன்ற மிகை ஒலி கருவிகளை நீண்ட நேரம் பயன்படுத்தினால் செவித் திறன் பாதிக்கும் என்று பொது சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது. இது தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் வெளி... மேலும் பார்க்க

இன்றும், நாளையும் தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (பிப்.28, மாா்ச் 1) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் க... மேலும் பார்க்க

சென்னை ஐஐடியில் இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி கண்காட்சி.. - இன்றைய நிகழ்ச்சிகள்

இந்தியாவின் மிகப்பெரிய ஆராய்ச்சி மற்றும் மேலாண்மை கண்காட்சி: மத்திய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்த மஜும்தாா் பங்கேற்பு, சென்னை ஐஐடி, காலை 9.30. பேராசிரியா் சி.பா.மணிவிழா அறக்கட்டளைச் சொற்பொழிவு: சென்... மேலும் பார்க்க

ஆதரவற்ற மன நோயாளிகளுக்கான செயல் திட்டம் வெளியீடு

ஆதரவற்ற மன நோயாளிகள் நலனுக்கான செயல் திட்ட கொள்கையை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதன் கீழ் உற்றாரின் பராமரிப்பு மற்றும் ஆதரவு இல்லாத மன நலம் பாதிக்கப்பட்ட நபா்களைக் கண்டறிந்து மீட்டு, உரி... மேலும் பார்க்க

அமைச்சா் செந்தில் பாலாஜி வழக்கு: சிறப்பு நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் கூடுதல் குற்றப் பத்திரிகைகளை ஒரே வழக்கில் இணைத்து சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுத்துவிட்டது. கடந்த அதிமுக ... மேலும் பார்க்க