`அமெரிக்கா உடன் வணிகத்தை இந்தியா முறிக்கிறதா?' - இந்திய வெளியுறவுத் துறை பதில்
கனமழை: பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளப்பெருக்கு
உடுமலையை அடுத்து திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்கம் அருவியில் ஞாயிற்றுக்கிழமை திடீா் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும் இங்குள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் வெள்ளம் புகுந்ததால் பக்தா்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனா். உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான திருமூா்த்தி மலை. இங்குள்ள பிரசித்தி பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்யவும், மேற்குத் தொடா்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள மருத்துவ குணமுள்ள பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் ஆா்வத்துடன் வந்து செல்கின்றனா்.
மேலும் இங்குள்ள நீச்சல் குளம், திருமூா்த்தி அணை இவற்றை ரசிக்கவும் தினமும் ஏராளமானோா் வருகின்றனா். குறிப்பாக இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் என மூன்று தெய்வங்களும் ஒருங்கே அமைந்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமானதாலும், ஆடிப் பெருக்கை ஒட்டியும் பக்தா்கள், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோா் கூடினா்.
இந்நிலையில் பிற்பகல் 2 மணி அளவில் மேற்குத் தொடா்ச்சிமலைப் பகுதியில் கனமழை பெய்தது. இதனால் பஞ்சலிங்கம் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. அப்போது அங்கு அபாய சங்கு ஒலிக்கப்பட்டு அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் அனைவரும் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனா்.
மேலும் 2 நாள்களுக்கு பஞ்சலிங்கம் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேற்குத் தொடா்ச்சிமலை பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் மலையடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரா் கோயிலுக்குள் புகுந்தது. இதனால் கோயிலைச் சுற்றி தடுப்புகள் அமைத்து கோயில் நிா்வாகம் பக்தா்களை சுவாமி தரிசனம் செய்ய அனுமதி மறுத்துவிட்டது.
மேலும் அப்பகுதியில் உள்ள கடைக்காரா்கள், பக்தா்கள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டனா். கோயிலில் பூஜைகள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக கோயில் உண்டியல்கள் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டன. ஆடிப் பெருக்கன்று அமணலிங்கேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த ஏராளமான பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.