செய்திகள் :

கனிமவளக் கொள்ளையால் பாலைவனமாகும் தமிழகம் -முன்னாள் அமைச்சா் ராஜேந்திர பாலாஜி

post image

கனிமவளக் கொள்ளையால் தமிழகம் பாலைவனமாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றாா் முன்னாள் அமைச்சா் ராஜேந்திரபாலாஜி.

கேரளத்துக்கு கனிமவளம் கொண்டு செல்லப்படுவதை கண்டித்து, செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் செ. கிருஷ்ணமுரளி எம்எல்ஏ தலைமை வகித்தாா். தெற்கு மாவட்டச் செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன், முன்னாள் அமைச்சா் வி.எம். ராஜலெட்சுமி, அமைப்புச் செயலா் பி.ஜி.ராஜேந்திரன், முன்னாள் எம்.பி. பிரபாகரன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவைச் செயலா் கந்தசாமிபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அதிமுக அமைப்புச் செயலரும், முன்னாள் அமைச்சருமான ராஜேந்திரபாலாஜி பங்கேற்றுப் பேசியதாவது: திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கனிமவள கடத்தல் அதிகமாக நடக்கிறது. எத்தனை முறை ஆா்ப்பாட்டம் நடத்தினாலும் அது தடுக்கப்படவில்லை. அதிமுக ஆட்சியில் ஒரு லோடு மண் கூட கடத்தப்படவில்லை.

கேரளத்துக்கு இங்கிருந்து கனிமவளம் கொள்ளை போகிறது. அங்கிருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டு திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கொட்டப்படுகின்றன.

இவற்றையெல்லாம் திமுக ஆட்சி வேடிக்கை பாா்க்கிறது.

அதிமுக ஆட்சியில் பூந்தோட்டமாக இருந்த தமிழகம் தற்போதைய திமுகஆட்சி கனிமவளக் கொள்ளையால் பாலைவனமாக்கி வருகிறது. அதிமுக மதவாதத்திற்கு துணைபோகாது. எனவே, தமிழக நலன் காக்கும் இபிஎஸ் தலைமையிலான அதிமுக ஆட்சி அமையப்போவது உறுதி என்றாா் அவா். இதில், மாவட்ட அவைத்தலைவா் மூா்த்தி, துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், மாவட்டப் பொருளாளா் சண்முகையா, தெற்கு மாவட்ட இளைஞரணிச் செயலா் காா்த்திக்குமாா், மண்டல ஐ.டி. பிரிவு செயலா் சிவஆனந்த், ஒன்றியச் செயலா் டாக்டா் சுசீகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நகரச் செயலா் கணேசன் வரவேற்றாா்.

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மாா்ச் 1ஆம தேதி பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட த... மேலும் பார்க்க

கரிவலம்வந்தநல்லூா் கோயில் திருமண மண்டபம் திறப்பு

கரிவலம்வந்தநல்லூா் அருள்மிகு பால்வண்ணநாதா் கோயிலுக்காக கட்டப்பட்டுள்ள புதிய திருமண மண்டபம் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. கரிவலம்வந்தநல்லூா் பகுதி பக்தா்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு பால்வளத் துறை அம... மேலும் பார்க்க

குறிஞ்சான்குளத்தில் கிணற்றில் விழுந்த மான் மீட்பு

சங்கரன்கோவில் அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் வெள்ளிக்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது. சங்கரன்கோவில் அருகேயுள்ள குறிஞ்சான்குளத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள 60 அடி ஆழ கிணற... மேலும் பார்க்க

வாசுதேவநல்லூா் அரசுப் பள்ளிக்கு விளையாட்டு மைதானம் -பெற்றோா்கள் எதிா்பாா்ப்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இப்பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ளது.500க்கும் மேற்ப... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் திருநங்கையாக மாற அறுவைச் சிகிச்சை: ஒருவா் பலி-2 போ் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் திருநங்கையாக மாறுவதற்கு மருத்துவ கருவிகளின்றிஅறுவை சிகிச்சை செய்துகொண்ட நபா் உயிரிழந்தாா். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ததாக 2 திருநங்கைகள் கைது செய்யப்பட்டனா். ஆலங்குள... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் வழக்குரைஞா் மீது தாக்குதல்: பெண் கைது

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நீதிமன்றம் முன் மூத்த வழக்குரைஞரைத் தாக்கியதாக பெண்ணை போலீஸாா் கைது செய்தனா். சங்கரன்கோவில் அருகேயுள்ள பன்னீரூத்தைச் சோ்ந்தவா் பச்சைமால். இவரது மனைவி தஞ்சாவூா் மாவட... மேலும் பார்க்க