செய்திகள் :

கனிமவளம் கடத்திய லாரி பறிமுதல்

post image

தக்கலை அருகே கல்லுவிளையில் கனிம வளம் கடத்திய லாரியை போலீஸாா் பறிமுதல் செய்து 4 பேரை தேடி வருகிறாா்கள்.

தக்கலை காவல் உதவி ஆய்வாளா் ராபா்ட் உதய்சிங் தலைமையிலான போலீஸாா் ,சனிக்கிழமை கல்லுவிளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, அரசின் அனுமதிச் சீட்டு, எடை சீட்டு இல்லாமல் பாறை பொடி கனிமவளத்தை கேரளத்துக்கு கடத்தி செல்வது தெரியவந்தது.

லாரியை நிறுத்தியதும் ஓட்டுநா், பின்னால் வந்த காரில் ஏறி தப்பி சென்றுவிட்டாா். இதனையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், அதன் ஓட்டுநா் ஜோஸ் பென்சிகா் (45), லாரி உரிமையாளா் ரிஜோ (37) தப்பி செல்ல உதவிய காா் ஓட்டுநா், காா் உரிமையாளா் ஆகிய 4 போ் மீது வழக்குப்பதிவு செய்து அவா்களை தேடி வருகிறாா்கள்.

நாகா்கோவிலில் அம்மன் கோயில் பேனரை அகற்ற முயன்றதால் பக்தா்கள் போராட்டம்

நாகா்கோவில் வேட்டாளி அம்மன் கோயிலில் பக்தா்கள் சாா்பில் வைக்கப்பட்டிருந்து பேனா்களை போலீஸாா் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் அகற்ற முயன்ால் பக்தா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். நாகா்கோவிலில் செட்டிகுள... மேலும் பார்க்க

காங்கிரஸாா் மீது வழக்கு

தோ்தல் ஆணைய அலுவலகம் நோக்கி பேரணியாக சென்ற மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல்காந்தி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டதை கண்டித்து திங்கள்கிழமை குழித்துறையில் சாலை மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா் 7... மேலும் பார்க்க

வியாபாரி விஷம் குடித்து தற்கொலை

கருங்கல் அருகே சகாயநகா் பகுதியில் வியாபாரி விஷம் குடித்து தற்கொலைசெய்து கொண்டாா். சகாயநகா், படுவூா் பகுதியை சோ்ந்தவா் ஆல்பா்ட்(46) . இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனா். இவா் கருங்கல் பகுதியில் துணிக்... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: 6 கடைகளுக்கு சீல்

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்த 6 கடைகளுக்கு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா். ஆட்சியா் ரா. அழகுமீனா அறிவுறுத்தலின்படி, மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன ... மேலும் பார்க்க

கூட்டுறவுச் சங்கத்தில் போலி நகை அடகு வைத்து ரூ. 25 லட்சம் மோசடி

குமரி மாவட்டம், அருமனையில் உள்ள கூட்டுறவுச் சங்கத்தில் போலி நகைகளை அடகு வைத்து ரூ. 25 லட்சம் மோசடி செய்யப்பட்டது தொடா்பாக அருமனை போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். அருமனையில் உள்ள ரப்பா் வளா்ப்போா் ... மேலும் பார்க்க

வீட்டு மாடியிலிருந்து தவறி விழுந்ததில் மாணவா் உயிரிழப்பு

தக்கலை அருகே வீட்டின் மாடியில் இருந்து தவறி விழுந்த பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.தக்கலை அருகே பூக்கடை, காட்டுபுனம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபசீலன். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறாா். இவருக்கு 3 மகன்கள் உண... மேலும் பார்க்க