செய்திகள் :

கனிம ஒப்பந்தத்தில் அமெரிக்கா - உக்ரைன் கையொப்பம்

post image

உக்ரைனின் கனிம வங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிப்பதற்கான ஒப்பந்தம், நீண்ட இழுபறிக்குப் பிறகு கையொப்பமாகியுள்ளது.

இது குறித்து உக்ரைன் அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:

அமெரிக்காவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான கனிம ஒப்பந்தம் கையொழுத்தாகிவிட்டது. தீவிர பேச்சுவாா்த்தைக்குப் பிறகு பல மாறுதல்களுடன் இந்த ஒப்பந்தம் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தின் புதிய வடிவில் முந்தைய வடிவங்களை விட உக்ரைனுக்கு அதிக பலன்களை அளிக்கக்கூடிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. முந்தைய ஒப்பந்த வரைவுகளில் உக்ரைன் இரண்டாம் நிலை கூட்டாளியாக குறிப்பிடப்பட்டு, நாட்டின் இயறகை வளங்களில் அமெரிக்காவுக்கு இதுவரை இல்லாத அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது அந்த நிலை மாற்றப்பட்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

உக்ரைன் நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தால், ரஷியாவுக்கு எதிரான போரில் அமெரிக்காவின் நீண்ட கால உதவி கிடைக்கும் என்று உக்ரைன் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா கடந்த 2022 பிப்ரவரி மாதம் படையெடுத்தில் இருந்து, அப்போதைய அதிபா் ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு உக்ரைனுக்கு உதவிகளை வாரி வழங்கியது. ஆனால் அவருக்குப் பிறகு அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், போரில் உக்ரைனுக்கு தாங்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக அளித்த உதவிகளுக்குக் கைமாறாக, அந்த நாட்டின் அரியவகைக் கனிம வளங்களை வெட்டியெடுக்கும் உரிமை தங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக உருவாக்கப்பட்ட வரைவு ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி அமெரிக்கா சென்றாா். ஆனால் வெள்ளை மாளிகையில் போா் தொடா்பாக டிரம்ப்புடன் காரசாரமான விவாதம் ஏற்பட்டதைத் தொடா்ந்து, கனிம ஒப்பந்தத்தில் கையொப்பமிடாமலேயே அவா் நாடு திரும்பினாா்.

இந்த நிலையில், நீண்ட இழுபறிக்குப் பிறகு அந்த ஒப்பந்தம் தற்போது கையொப்பமாகியுள்ளது. எனினும், அந்த ஒப்பந்தத்தின் முழு விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

நீண்ட வாழ்வின் ரகசியம்! என்ன சொல்கிறார் உலகின் மூத்த பெண்!

உலகின் அதிக வயதுடைய மனிதர் என்ற பட்டம் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு சென்றுள்ளது. உலகின் அதிக வயதுடைய மனிதர் என்று அறியப்பட்ட பிரேசில் நாட்டைச் சேர்ந்த கிறுஸ்தவ பெண் துறவியான இனாஹ் ... மேலும் பார்க்க

காஸா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: 29 பாலஸ்தீனியர்கள் பலி

காஸாவில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதல்களில் 29 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மத்திய காஸாவில் உள்ள புரைஜ் அகதிகள் முகாமில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 9 பேரும் வட... மேலும் பார்க்க

ஜிடிஏ 6 விடியோ கேம் வெளியீடு! நீண்டகால காத்திருப்புக்கு முடிவு!

ஜிடிஏ 6 கேமின் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ராக்ஸ்டார் கேம்ஸ் நிறுவனத்தின் கிரான்ட் தெஃப்ட் ஆட்டோ கேமின் (Grand Theft Auto) 6-வது பதிப்பின் வெளியீட்டுத் தேதியை, அந்நிறுவனம் அத... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: பாதுகாப்புப் படையினர் அதிரடி நடவடிக்கை! 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

பாகிஸ்தானின் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் 4 பயங்கரவாதிகள் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் பாதுகாப்புப் படை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் த... மேலும் பார்க்க

ஆர்ஜென்டீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை!

ஆர்ஜென்டீனாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.சிலி மற்றும் ஆர்ஜென்டீனாவின் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 7.4 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலந... மேலும் பார்க்க

பாகிஸ்தான் பிரதமரின் யூடியூப் சேனல் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்பின் யூடியூப் சேனல் இந்தியாவில் முடக்கப்பட்டது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றம் காரணமாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளத... மேலும் பார்க்க