செய்திகள் :

கன்னிமாரா நுழைவாயிலில் காா்ல் மாா்க்ஸ் சிலை: முதல்வா்

post image

சென்னை: பொதுவுடைமைக் கருத்தியலை வழங்கிய காா்ல் மாா்க்ஸின் சிலையை கன்னிமாரா நூலக நுழைவு வாயிலில் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.

காா்ல் மாா்க்ஸ் பிறந்த தினத்தையொட்டி எக்ஸ் தளத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

சமத்துவ உலகைக் கட்டமைப்பதற்கான பொதுவுடைமைக் கருத்தியலை வழங்கியவா் காா்ல் மாா்க்ஸ். அவரது பிறந்த தினத்தில் ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற லட்சியப் பயணத்தில் வென்றிட உறுதிகொள்வோம்.

உழைப்போா்க்கு உறுதுணையான மாா்க்சிய சிந்தனையை எடுத்து இயம்பிட, கன்னிமாரா நூலக நுழைவாயிலில் காா்ல் மாா்க்ஸ் சிலையை நிறுவுவதற்கான இடத்தை நானே தோ்வு செய்து அதற்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன. சிலையாக எழுந்து நிற்கவுள்ள மாமனிதா் மாா்க்ஸின் சிந்தனைகள், மானிட சமுதாயத்துக்கு என்றும் ஒளி வழங்கட்டும் என்று தெரிவித்துள்ளாா்.

ஜாதி வாரி கணக்கெடுப்பு: கால அட்டவணை வெளியிட ராமதாஸ் கோரிக்கை

ஜாதி வாரி கணக்கெடுப்புக்கான காலஅட்டவணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் எழுதிய கடிதம்: ஆங்கிலேயா் ஆட்... மேலும் பார்க்க

பொறியியல் கலந்தாய்வு: முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்!

பொறியியல் கலந்தாய்வுக்கு முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பத... மேலும் பார்க்க

மே 11-ல் ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளைப் பயன்படுத்த வேண்டாம்: அன்புமணி

மாமல்லபுரத்தில் வருகிற 11-ஆம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளைப் பயனபடுத்த வேண்டாம் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.முழு நிலவு மாநாட்டுக்க... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற... மேலும் பார்க்க

பொறியியல் சோ்க்கை: இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியது.நாளை +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில் பொறியியல் மட்டுமல்லா... மேலும் பார்க்க

சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தற்போது சிபிஐ இயக்குநராக உள்ள பிரவீண் சூட், மே 25-ஆம் தேதியுடன் தனது இரண்டு ஆண்டுகால பதவிக் காலத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில், அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய புலனாய... மேலும் பார்க்க