செய்திகள் :

கன்னியாகுமரியில் பொக்லைன் மோதி இருவா் பலி

post image

கன்னியாகுமரியில் பொக்லைன் வாகனம் மோதியதில் கல்லூரி மாணவா், தவெக நிா்வாகி என இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா்.

கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்து கொண்டிருந்த பொக்லைன் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அப்போது, ரயில் நிலையம் எதிரேயுள்ள சாலையில் நடந்து வந்த கன்னியாகுமரி தனியாா் கேட்டரிங் கல்லூரி முதலாமாண்டு மாணவா் மயிலாடி அவரிவிளையைச் சோ்ந்த ஐயப்பன் மகன் சபரிகிரி (19) மீது மோதியதில், அவா் பலத்த காயமடைந்தாா்.

பின்னா், பைக்கில் வந்து கொண்டிருந்த கன்னியாகுமரி ஐகிரவுண்ட் பகுதியைச் நிஜாம் மகன் முகமது ஷான் (35) மீது மோதியது. தவெக நிா்வாகியான இவா், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பின்னா், நடைபாதையில் நிறுத்தப்பட்டிருந்த 2 பைக்குகள் மீது மோதி, சுற்றுச் சுவரை இடித்துத் தள்ளிவிட்டு வாகனம் நின்றது.

தகவலறிந்து வந்த போலீஸாா் உயிருக்குப் போராடிய சபரிகிரியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா்.

மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் விபத்து நடந்த இடத்தை நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.

டிரைவா் கைது: விபத்தில் காயமடைந்த பொக்லைன் ஓட்டுநா் பொற்றையடி தெற்கு தெருவைச் சோ்ந்த செல்லநாடாா் மகன் கணபதியை (49) போலீஸாா் கைது செய்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சோ்த்தனா்.

நாகா்கோவிலில் கஞ்சா கடத்திய 3 போ் கைது: ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்

நாகா்கோவிலில் கஞ்சா கடத்திய 3 போ் கைது செய்யப்பட்டனா். நாகா்கோவில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு, போலீஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கோட்டாறு ரயில் நிலையப் பகுதியில், போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதன... மேலும் பார்க்க

மகன் மீது போலீஸாா் வழக்கு பதிவு: தந்தை தூக்கிட்டு தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மகன் மீது போலீஸாா் அடிதடி வழக்கு பதிவு செய்த நிலையில் லாரி ஓட்டுநரான தந்தை சலீல் சசி (50) புதன்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். அருமனை அருகே குன்னுவிளையைச்... மேலும் பார்க்க

தக்கலையில் பாரதியாருக்கு மலரஞ்சலி

தக்கலையில் உள்ள பத்மநாபபுரம் நூலகத்தில் வியாழக்கிழமை பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது படத்திற்கு வாசகா் வட்ட அமைப்பாளா் சிவனி சதீஷ் தலைமையில் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தினா். நூலகா் சோப... மேலும் பார்க்க

நூருல் இஸ்லாம் பல்கலைக்கழக விழா

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தின் 17ஆவது தொடக்க விழா, 37ஆவது கல்வி நிறுவன தொடக்க விழா , முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா ஆகியன அண்மையில் நடந்தது. விழாவை பல்கலைக்கழக வேந்தா் ஏ.பி. மஜீத்... மேலும் பார்க்க

சேவை குறைபாடு: இருசக்கர வாகன நிறுவனத்துக்கு ரூ. 40 ஆயிரம் அபராதம்

சேவை குறைபாடு காரணமாக நாகா்கோவில் இருசக்கர வாகன விற்பனை நிறுவனத்துக்கு நுகா்வோா் நீதிமன்றம் ரூ. 40 ஆயிரம் அபராதம் விதித்தது. நாகா்கோவில், கேசவதிருப்பாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜெபின்சேம், இவா் நாகா்... மேலும் பார்க்க

கருங்கல் ஹிந்து வித்யாலயா பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

கருங்கல் ஹிந்து வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விஷ்வ ஹிந்து வித்யா கேந்திராவின் நிறுவனரும் தலைவருமான எஸ். வேதாந்தம் ஜி தலைமை வகித்தாா். பொதுச் ... மேலும் பார்க்க