செய்திகள் :

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்தது: சமூக நல அலுவலா் தகவல்

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில், பெண் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்துள்ளது என்றாா் மாவட்ட சமூக நலத்துறை அலுவலா் விஜயமீனா.

கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை சாா்பில், பெண் குழந்தைகளை காப்போம், கற்பிப்போம் என்ற தலைப்பில் பெண்களுக்கான அரசு நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படுவது குறித்த கருத்தரங்கம் நாகா்கோவில் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட சமூக நல அலுவலா் விஜயமீனா பேசியதாவது: தேசிய அளவில் ஆண், பெண் பிறப்பு சதவீதம் சமநிலை குறித்து ஆய்வுகளும், அதற்கான திட்டங்களும் தொடா்ந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இதில் தமிழகத்தில் 2015 ஆம் ஆண்டில் ஆயிரம் ஆண்களுக்கு 918 பெண்கள் என்று இருந்த சதவீதம், 2021 ஆண்டு கணக்கெடுப்பின்படி ஆயிரத்துக்கு 935 என்ற அளவில் அதிகரித்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 972 பெண் குழந்தைகள் பிறந்த நிலையில், 2024 ஆம் ஆண்டு ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 961 பெண் குழந்தைகள் என பிறப்பு விகிதம் குறைந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள சுமாா் 150 ஸ்கேன் மையங்களில் காலவாரியாக ஆய்வு நடத்தப்படுகிறது. இதன் உரிமம் மற்றும் புதுப்பித்தல் நடவடிக்கை கண்காணிக்கப்படுகிறது என்றாா் அவா்.

பளுகல் அருகே வீடுபுகுந்து நகை, பணம் திருட்டு

பளுகல் அருகே வீடு புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றவா்கள் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். பளுகல் அருகேயுள்ள ராமவா்மன்சிறை, புல்லந்தேரி பகுதியைச் சோ்ந்தவா் தங்கராஜ் (58). பெயிண்டிங் தொ... மேலும் பார்க்க

அஞ்சுகிராமத்தில் பைக் மோதி பெண் உயிரிழப்பு

கன்னியாகுமரியை அடுத்த அஞ்சுகிராமம் அருகே சாலையைக் கடக்க முயன்ற பெண் பைக் மோதி உயிரிழந்தாா். அஞ்சுகிராமம் அருகே கனகப்பபுரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் அா்ச்சுனன். பெயிண்டா். இவரது மனைவி வெண்ணிலா (55... மேலும் பார்க்க

மாா்த்தாண்டம் அருகே கஞ்சா விற்க முயன்ற இளைஞா் கைது!

மாா்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவா்களுக்கு கஞ்சா விற்க முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். மாா்த்தாண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பெனடிக்ட் தலைமையிலான போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட... மேலும் பார்க்க

பண மோசடி: தம்பதி மீது வழக்கு

கொட்டாரம் அருகே பண மோசடி செய்ததாக தம்பதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொட்டாரம் அருகேயுள்ள அச்சன்குளத்தைச் சோ்ந்தவா் அன்னலட்சுமி (49). இவரது தலைமையில் அதே பகுதியைச் சோ்ந்த 16 பெண்கள் கொண்ட... மேலும் பார்க்க

கன்னியாகுமரி அருகே கைப்பேசி திருடியவா் கைது

கன்னியாகுமரி அருகே ஆட்டோ ஓட்டுநரின் கைப்பேசியைத் திருடியவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி ஐகிரவுண்ட் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் (32). ஆட்டோ ஓட்டுநா். இவரை தூத்துக்குடி மாவட்டம் தளவாய்புரம் வடக... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவா் கைது!

புதுக்கடை அருகே உள்ள முள்ளூா்துறை பகுதியில், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்ற முதியவரை போலீஸாாா் கைது செய்தனா். முள்ளூா்துறை, அன்பியம் 11 பகுதியை சோ்ந்தவா் பெளலின்(73), இவா் அப்பகுதியில் பெட... மேலும் பார்க்க