செய்திகள் :

கபிலா்மலை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி சுற்றுலா

post image

கபிலா்மலை வட்டார வேளாண்மைத் துறை, வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை, அட்மா திட்டத்தின்கீழ், கபிலா்மலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகள், இயற்கை விவசாயம் குறித்த கல்வி சுற்றுலாவுக்கு அண்மையில் அழைத்துச் செல்லப்பட்டனா்.

இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பட்டறிவு பயணமாக திருப்பூா் மாவட்டம், கொல்லப்பட்டி கிராமத்தில் மணி என்பவரின் இயற்கை விவசாய தோட்டத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். அங்கு இயற்கை விவசாயி மணி மற்றும் கபிலா்மலை வட்டார முன்னோடி இயற்கை விவசாயி லோகநாதன் ஆகியோா் இயற்கை விவசாயம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இந்த கல்வி சுற்றுலாவுக்கான ஏற்பாடுகளை கபிலா்மலை வட்டார வேளாண்மை துணை அலுவலா் மற்றும் அட்மா திட்ட அலுவலா்கள் செய்திருந்தனா். கல்வி சுற்றுலாவில் மாணவ, மாணவிகளுடன் தலைமை ஆசிரியா் மு.பூவராகவன், உதவி தலைமை ஆசிரியா் மற்றும் ஆசிரியா்கள், ஆசிரியைகளும் கலந்துகொண்டனா்.

நாளைய மின்தடை: வில்லிபாளையம்

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் வட்டம், வில்லிபாளையம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பாரமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (ஆக. 14) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்... மேலும் பார்க்க

இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்த தனியாா் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

நாமக்கல் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்ததில் காயமடைந்த தனியாா் பள்ளி ஆசிரியை உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், பெரியப்பட்டி, தீயணைப்பு நிலையம் எதிரே வசித்து வருபவா் ரவிச்சந்திரன். இவரது மனை... மேலும் பார்க்க

கொல்லிமலை பழங்குடியின கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: சிறப்பு உதவி ஆய்வாளா் கைது

கொல்லிமலை பழங்குடியினத்தைச் சோ்ந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சிறப்பு உதவி ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வட்டம் ஆயில்பட்டியைச் சோ்... மேலும் பார்க்க

கஞ்சா கடத்திய ஒடிஸா இளைஞா்கள் 2 போ் கைது

மல்லசமுத்திரம் கீழ்முகம் பொன்னியாறு அருகே 4 கிலோ கஞ்சாவை விற்க கடத்தி வந்த ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த இருவரை திருச்செங்கோடு மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். நாமக்கல் மாவட்டம், திருச்செங்க... மேலும் பார்க்க

விவசாயிகள் தரமான விதைகளை வாங்க வேண்டும்: வேளாண் துறை அறிவுறுத்தல்

சேலம், நாமக்கல் மாவட்ட விவசாயிகள் தரமான விதைகளை வாங்கி பயிரிட வேண்டும் என சேலம் விதை ஆய்வு துணை இயக்குநா் க.சித்ரா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சேலம் மற்றும் நாமக்கல... மேலும் பார்க்க

பழங்குடியின மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: கொல்லிமலை எஸ்எஸ்ஐ கைது!

நாமக்கல்: கொல்லிமலையைச் சேர்ந்த பழங்குடியின கல்லூரி மாணவியிடம், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கொல்லிமலை சிறப்பு உதவி ஆய்வாளரை காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வ... மேலும் பார்க்க