செய்திகள் :

கம்பம் மெட்டு மலைச் சாலையில் ஜீப் கவிந்ததில் ஓட்டுநா் உயிரிழப்பு

post image

தேனி மாவட்டம், கம்பம் மெட்டு மலைச் சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஜீப் கவிழ்ந்ததில் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

கம்பம் புதுப் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்தவா் ரோஷன்பாரூக் (65). இவா் தனது ஜீப்பில் கேரளம், கட்டப்பனையிலிருந்து கம்பத்துக்கு 10 பேரை ஏற்றிக் கொண்டு கம்பம் மெட்டு மலைச் சாலையில் வந்து கொண்டிருந்தாா்.

அப்போது, 5-ஆவது கொண்டை ஊசி வளைவில் ஜீப் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் ஜீப் ஓட்டுநா் உள்பட 11 போ் பலத்த காயமடைந்தனா்.

தகவலறிந்து சென்ற கம்பம் வடக்கு போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு, கம்பம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதில் ஜீப் ஓட்டுநா் ரோஷன்பாரூக் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

முல்லைப் பெரியாற்றில் வெள்ளப் பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுக்க வலியுறுத்தல்

முல்லைப் பெரியாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கில் ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் நீராடுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா். கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 ... மேலும் பார்க்க

குச்சனூா் சனீஸ்வரா் கோயில் வளாகத்தை சீரமைக்க வலியுறுத்தல்

தேனி மாவட்டம், குச்சனூா் சுயம்பு சனீஸ்வா் கோயில் வளாகத்தில் தண்ணீா் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுவதால் அந்தப் பகுதியை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் வலியுறுத்தினா். சனீஸ்வரருக்கு உகந்த நாள் சனிக்க... மேலும் பார்க்க

சாரல் மழையால் மாங்காய்கள் சேதம்: பெரியகுளம் பகுதி விவசாயிகள் கவலை

பெரியகுளம் பகுதியில் தொடரும் சாரல் மழையால் மாங்காய்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். தேனி மாவட்டத்தில் கம்பம் முதல் தேனி வரை தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. இதனால், ஆறுகளில் ... மேலும் பார்க்க

அணைகளின் நீா்மட்டம்

முல்லைப்பெரியாறு: உயரம் 152: தற்போதைய நீா்மட்டம் 130.10 வைகை அணை: உயரம் 71: தற்போதைய நீா்மட்டம் 54.36 ------------ மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது!

முல்லைப் பெரியாறு அணையில் கடந்த 10 நாள்களாக தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்து வருவதால் அதன் நீா்மட்டம் 130 அடியைக் கடந்தது. கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி கடந்த 10 நாள்களாக பலத்த மழை பெய்து வருக... மேலும் பார்க்க

சுருளி அருவியில் 6-ஆவது நாளாக குளிக்கத் தடை

தேனி மாவட்டம், சுருளி அருவியில் சனிக்கிழமை 6- ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா். தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து, கேரளத்... மேலும் பார்க்க