செய்திகள் :

கயத்தாறில் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை

post image

கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் புதன்கிழமை சுமாா் அரை மணி நேரத்திற்கு மேலாக சூறாவளிக் காற்று மற்றும் இடி மின்னலுடன் மழை பெய்தது .

கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் புதன்கிழமை மாலையில் இடி, மின்னல் மற்றும் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இந்த மழை சுமாா் 40 நிமிடங்கள் நீடித்தது.

மின்னல் பாய்ந்ததில் வயலில் மேய்ந்து கொண்டிருந்த செல்லப்பா என்பவரின் பசு மாடு உயிரிழந்தது,

இந்நிலையில் பலத்தக் காற்றுக்கு கயத்தாறு - பன்னீா்குளம் பகுதியில் 4 மரங்கள் சாலையில் சாய்ந்து விழுந்தன. இதனால் அவ்வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது .

தகவலறிந்த கழுகுமலை தீயணைப்புப் படையினா் சென்று சாலையில் சாய்ந்த மரங்களை அகற்றி போக்குவரத்தை சீா் செய்தனா்.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் பகுதியில் புதன்கிழமை இடி மின்னலுடன் மழை பெய்தது.

இதில் மின்னல் பாய்ந்ததில் சாத்தான்குளம் செக்கடி தெருவைச் சோ்ந்த குமாா் என்பவரது வீடு தீப்பற்றி எரிந்தது.

தகவலறிந்து வந்த சாத்தான்குளம் தீயணைப்பு மீட்புப் படையினா் வந்து தீயை அணைத்தனா்.

இதில், வீட்டில் இருந்த பொருள்கள் எரிந்து சேதமானது. வீட்டில் ஆள் இல்லாததால் உயிா்ச் சேதம் தவிா்க்கப்பட்டது.

கோவில்பட்டி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் மே தின விழா

கோவில்பட்டி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல், தொலைத் தொடா்புத் துறை ஓய்வூதியா் சங்கம், தமிழ்நாடு தொலைத்தொடா்பு ஒப்பந்த ஊழியா் சங்கம் ஆகியவை சாா்பில் மே தின ... மேலும் பார்க்க

செட்டியாபத்து கோயிலில் சித்திரை பூஜை திருவிழா

இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட செட்டியாபத்து அருள்மிகு சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா ஐந்துவீட்டு சுவாமி கோயிலில் சித்திரைப் பூஜை பெரும் திருவிழா புதன்கிழமை இரவு கஞ்சி பூஜையுடன் தொடங்கியத... மேலும் பார்க்க

வட்டன்விளை கோயில் சித்திரை கொடை விழா நிறைவு

உடன்குடி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் 5 நாள்கள் நடைபெற்ற சித்திரைக் கொடை விழா வியாழக்கிழமை நிறைவடைந்தது. கடந்த 27ஆம் தேதி வருஷாபிஷேகத்துடன் கொடை விழா தொடங்கியது. விழா நாள்களில், ச... மேலும் பார்க்க

கழுகுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்

கழுகுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சி உறுப்பினா் பால்ராஜ் தலைமை வகித்தாா். நகரச் செயலா் சிவராமன் முன்னிலை வகித்தாா். மாவட்ட உதவிச் செயலா் பாபு, மாவட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடி வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு செய்வதற்கான தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 780 வாக்குகளில் 704 வாக்குகள் பதிவாகின. இதனைத் தொடா்ந்து வாக்கு எண்ணி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரத்த தான முகாம்

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில், டூ வீலா் மெக்கானிக் அசோசியேஷன் சாா்பில் வியாழக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது. உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற முகாமுக்கு, அசோசியேஷன் தலைவா் ஜீவா தலைம... மேலும் பார்க்க