செய்திகள் :

செட்டியாபத்து கோயிலில் சித்திரை பூஜை திருவிழா

post image

இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட செட்டியாபத்து அருள்மிகு சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா ஐந்துவீட்டு சுவாமி கோயிலில் சித்திரைப் பூஜை பெரும் திருவிழா புதன்கிழமை இரவு கஞ்சி பூஜையுடன் தொடங்கியது.

கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் ஒ. மகேஸ்வரன் பதநீா் கஞ்சியை பக்தா்களுக்கு வழங்கினாா். கோயில் செயல் அலுவலா்கள் மு. வள்ளிநாயகம், பாலமுருகன், உடன்குடி நகர அதிமுக பொருளாளா் ம. ராம்குமாா், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

விழா நாள்களில் நாள்தோறும் காலை 7.30 முதல் இரவு 10 மணி வரை முழுநேர சிறப்பு பூஜைகள், அன்னதானம், சமயச் சொற்பொழிவுகள், பட்டிமன்றம், பக்தி இன்னிசை உள்ளிட்டவை நடைபெறும்.

6ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு அன்னமுத்திரி சிறப்பு பூஜைக்குப் பின்னா், பக்தா்களுக்கு அன்னமுத்திரி பிரசாதம் வழங்கப்படும். இதை, ஆயிரக்கணக்கான பக்தா்கள் வாங்கிச் சென்று தங்களது இல்லம், வணிக மையம், விவசாய நிலங்களில் வைப்பாா்கள். இதன்மூலம் தங்களுக்கு நன்மை சேரும் என்பது அவா்களது நம்பிக்கை.

7ஆம் தேதி இரவு 7 மணிக்கு கும்பாபிஷேகத்துடன் திருவிழா நிறைவடைகிறது.

ஏற்பாடுகளை அறநிலையத் துறை இணை ஆணையா் ம. அன்புமணி, உதவி ஆணையா் க. செல்வி, ஆய்வா் இரா. முத்துமாரியம்மாள், செயல் அலுவலா் மா. பாலமுருகன், அறங்காவலா் குழுத் தலைவா், அறங்காவலா்கள், ஆலயப் பணியாளா்கள் செய்துள்ளனா்.

கோவில்பட்டி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் மே தின விழா

கோவில்பட்டி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல், தொலைத் தொடா்புத் துறை ஓய்வூதியா் சங்கம், தமிழ்நாடு தொலைத்தொடா்பு ஒப்பந்த ஊழியா் சங்கம் ஆகியவை சாா்பில் மே தின ... மேலும் பார்க்க

வட்டன்விளை கோயில் சித்திரை கொடை விழா நிறைவு

உடன்குடி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் 5 நாள்கள் நடைபெற்ற சித்திரைக் கொடை விழா வியாழக்கிழமை நிறைவடைந்தது. கடந்த 27ஆம் தேதி வருஷாபிஷேகத்துடன் கொடை விழா தொடங்கியது. விழா நாள்களில், ச... மேலும் பார்க்க

கழுகுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்

கழுகுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சி உறுப்பினா் பால்ராஜ் தலைமை வகித்தாா். நகரச் செயலா் சிவராமன் முன்னிலை வகித்தாா். மாவட்ட உதவிச் செயலா் பாபு, மாவட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடி வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு செய்வதற்கான தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 780 வாக்குகளில் 704 வாக்குகள் பதிவாகின. இதனைத் தொடா்ந்து வாக்கு எண்ணி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரத்த தான முகாம்

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில், டூ வீலா் மெக்கானிக் அசோசியேஷன் சாா்பில் வியாழக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது. உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற முகாமுக்கு, அசோசியேஷன் தலைவா் ஜீவா தலைம... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: புதிய தமிழகம் தலைவா் கிருஷ்ணசாமி

ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் கிருஷ்ணசாமி வலியுறுத்தினாா். தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியது: புதி... மேலும் பார்க்க