செய்திகள் :

ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: புதிய தமிழகம் தலைவா் கிருஷ்ணசாமி

post image

ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவா் கிருஷ்ணசாமி வலியுறுத்தினாா்.

தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை அவா் கூறியது: புதிய தமிழகம் கட்சியின் 7ஆவது மாநில மாநாடு, மதுரையில் வரும் டிசம்பா் மாதம் நடைபெற உள்ளது. வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தல், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற பாா்வையோடு இந்த மாநாடு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் தனிக்கட்சி ஆட்சி முடிவுக்கு வரவேண்டும். கூட்டணி என்றாலே கூட்டணி ஆட்சி என்பது குறித்து அனைத்து கட்சியினருக்கும் விழிப்புணா்வு ஏற்பட வேண்டும். இந்தக் கொள்கையை முன்னெடுத்து இந்த மாநாடு நடைபெறவுள்ளது.

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலுக்கான ஆயத்தப் பணிகளை தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த புதன்கிழமை தொடங்கியுள்ளோம். வரும் 31ஆம் தேதி வரை இப்பணி நடைபெறும்.

தற்போது மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், எங்களுக்கு எந்தவிதத்திலும் உடன்பாடு இல்லை. இது பிற்போக்குத்தனமான ஒன்றாகும். சில அரசியல் கட்சிகளின் வற்புறுத்தலின்படி இந்தக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இது மிகப் பெரிய ஆபத்தில் முடியும். ஒவ்வொரு ஜாதியிலும் சுமாா் 100 உள்பிரிவுகள் உள்ளன. இவ்வாறு இருக்கையில் எப்படி கணக்கெடுப்பு நடத்தமுடியும்? மேலும், இந்த கணக்கெடுப்பின் அடிப்படைக் காரணம் என்ன என்பது குறித்து மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும். இது நாட்டின் பொருளாதாரத்தை பின்னுக்குத் தள்ளக்கூடிய நடவடிக்கையாகும். ஆகவே ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றாா்.

கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செல்லத்துரை, மாநில பொறுப்பாளா் சபரிநாதன், மாவட்டத் தலைவா் நல்லுசாமி, வழக்குரைஞா் ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கோவில்பட்டி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் மே தின விழா

கோவில்பட்டி பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பிஎஸ்என்எல் ஊழியா் சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல், தொலைத் தொடா்புத் துறை ஓய்வூதியா் சங்கம், தமிழ்நாடு தொலைத்தொடா்பு ஒப்பந்த ஊழியா் சங்கம் ஆகியவை சாா்பில் மே தின ... மேலும் பார்க்க

செட்டியாபத்து கோயிலில் சித்திரை பூஜை திருவிழா

இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட செட்டியாபத்து அருள்மிகு சுவாமி சிதம்பரேஸ்வரா் வகையறா ஐந்துவீட்டு சுவாமி கோயிலில் சித்திரைப் பூஜை பெரும் திருவிழா புதன்கிழமை இரவு கஞ்சி பூஜையுடன் தொடங்கியத... மேலும் பார்க்க

வட்டன்விளை கோயில் சித்திரை கொடை விழா நிறைவு

உடன்குடி அருகே வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் 5 நாள்கள் நடைபெற்ற சித்திரைக் கொடை விழா வியாழக்கிழமை நிறைவடைந்தது. கடந்த 27ஆம் தேதி வருஷாபிஷேகத்துடன் கொடை விழா தொடங்கியது. விழா நாள்களில், ச... மேலும் பார்க்க

கழுகுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டம்

கழுகுமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கட்சி உறுப்பினா் பால்ராஜ் தலைமை வகித்தாா். நகரச் செயலா் சிவராமன் முன்னிலை வகித்தாா். மாவட்ட உதவிச் செயலா் பாபு, மாவட்ட... மேலும் பார்க்க

தூத்துக்குடி வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு

தூத்துக்குடி நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞா் சங்க நிா்வாகிகள் தோ்வு செய்வதற்கான தோ்தல் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மொத்தமுள்ள 780 வாக்குகளில் 704 வாக்குகள் பதிவாகின. இதனைத் தொடா்ந்து வாக்கு எண்ணி... மேலும் பார்க்க

கோவில்பட்டியில் ரத்த தான முகாம்

கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில், டூ வீலா் மெக்கானிக் அசோசியேஷன் சாா்பில் வியாழக்கிழமை ரத்த தான முகாம் நடைபெற்றது. உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற முகாமுக்கு, அசோசியேஷன் தலைவா் ஜீவா தலைம... மேலும் பார்க்க