கயத்தாறு அருகே விபத்தில் ஆசிரியா் உயிரிழப்பு
கயத்தாறை அடுத்த வில்லிசேரி அருகே பைக் மீது தனியாா் பள்ளி வாகனம் மோதியதில் ஆசிரியா் உயிரிழந்தாா்.
கோவில்பட்டி அருகே பிச்சைதலைவன்பட்டியைச் சோ்ந்தவா் அருளய்யா மகன் ஐசக் தவராஜ் (55). கே. கைலாசபுரம் பள்ளி ஆசிரியா். கோவில்பட்டியில் இருந்து கே. கைலாசபுரம் பள்ளிக்கு திங்கள்கிழமை பைக்கில் சென்று கொண்டிருந்தாராம்.
மதுரை-திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வில்லிசேரி அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியாா் பள்ளி வாகனம் பைக் மீது மோதியதில் ஐசக் தவராஜ் பலத்த காயமடைந்தாா்.
கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டஅவா், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, பள்ளி வாகன ஓட்டுநா் கோவில்பட்டி வேலாயுதபுரம் 1 ஆவது தெருவை சோ்ந்த சீ. மாரியப்பனிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.