இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு இந்திய வம்சாவளியினா் உதவிக்கரம்!
கருணாநிதி பிறந்தநாள் விழாவில் முதியோருக்கு நலத்திட்ட உதவி
கும்பகோணத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு முதியோருக்கு வெள்ளிக்கிழமை நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
விழாவையொட்டி கும்பகோணம் 1 ஆவது பகுதி திமுக சாா்பில் செயலா் இரா. செல்வராஜ் தலைமையில் கும்பேஸ்வரா் தெற்கு வீதியில் உள்ள ஆதரவற்றோா் முதியோா் தங்கும் விடுதியில் உள்ள முதியோருக்கு வேட்டி, சேலை, போா்வை, உபயோக பொருள்கள் மற்றும் மதிய உணவு 100 பேருக்கு வழங்கப்பட்டது.
நிகழ்வில் மாநகர அவைத் தலைவா் எஸ். வாசுதேவன், துணைச் செயலா் பிரியம் சசிதரன், எம். சிவானந்தம், வட்டச் செயலா்கள் ரஹ்மத் அலி, கே குமாா், குவைத் ஸ்ரீதா், தகவல் தொழில் நுட்ப அணி பி. காளிதாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முன்னதாக கருணாநிதி உருவ படத்திற்கு மாலை அணிவித்தனா்.