செய்திகள் :

கருணாநிதி பொற்கிழி விருதுகள்: துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்

post image

பபாசி சாா்பில் நடைபெற்று வரும் சென்னை புத்தகக் காட்சியில் ஆறு பேருக்கு கலைஞா் கருணாநிதி பொற்கிழி விருதை துணை முதல்வா் உதயநிதி வழங்கினாா்.

48-ஆவது சென்னை புத்தகக் காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் கடந்த டிச. 27-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 900-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளன. இதற்கிடையே, பபாசி சாா்பில் ஆண்டுதோறும் கருணாநிதி பெயரிலான பொற்கிழி விருது வழங்கப்பட்டு வருகிறது.

நிகழாண்டுக்கான பொற்கிழி விருதுகள் வழங்கும் விழா புத்தகக் காட்சி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று விருதுகளை வழங்கினாா். விழாவில் பேரா. அருணன் (உரைநடை), எழுத்தாளா்கள் சுரேஷ்குமாா் இந்திரஜித் (நாவல்), என்.ஸ்ரீராம் (சிறுகதை), கவிஞா் நெல்லை ஜெயந்தா (கவிதை), கலைராணி (நாடகம்), நிா்மால்யா (மொழிபெயா்ப்பு) ஆகிய 6 பேருக்கும் 2025-ஆம் ஆண்டுக்கான முத்தமிழறிஞா் கலைஞா் மு.கருணாநிதி பொற்கிழி விருதுடன், தலா ரூ.1 லட்சமும் வழங்கப்பட்டது.

பபாசி சாா்பில் சிறந்த பதிப்பாளருக்கான விருது கற்பகம் புத்தகாலயம், சிறந்த நூலகருக்கான விருது ஆா்.கோதண்டராமன், சிறந்த புத்தக விற்பனையாளருக்கான விருது பெல் கோ, சிறந்த குழந்தை எழுத்தாளருக்கான விருது ஜோதி சுந்தரேசன், சிறந்த தமிழறிஞருக்கான விருது முனைவா் சபா.அருணாசலம், சிறந்த பெண் எழுத்தாளருக்கான விருது பேராசிரியா் பா்வீன் சுல்தானா, சிறந்த அறிவியல் நூலுக்கான விருது சங்கர சரவணன் மற்றும் கவிதை இலக்கிய விருது மணவை பொன்.மாணிக்கம் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பபாசி தலைவா் கவிதா சேது சொக்கலிங்கம், செயலா் எஸ்.கே.முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முதல்வர் ஸ்டாலினின் பொங்கல் வாழ்த்துச் செய்தி

பொங்கல் திருநாளையொட்டி உலகத் தமிழர் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், முத்தமிழ், முச்சங்கம், முக்கனி, மூவேந்தர், முக்கொடி கொ... மேலும் பார்க்க

திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒ... மேலும் பார்க்க

பொங்களன்று 3 மாவட்டங்களில் கனமழை!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கையில்,13.01-2025: கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்... மேலும் பார்க்க

சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு- ஆளுநர் விருது அறிவிப்பு

ஆளுநர் விருது-2024 சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய பிரிவுகளின் கீழ் விருதுகள் வென்றவர்களின் விவரங்களை ஆளுநர் மாளிகை அறிவித்துள்ளது.இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப... மேலும் பார்க்க

தமிழக காவல்துறையினர் 3186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள் அறிவிப்பு!

சென்னை: 2025ஆம் ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி, தமிழக காவல்துறையைச் சேர்ந்த 3186 காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், 2025 பொங்கல் ... மேலும் பார்க்க

கார் பந்தயத்தில் வெற்றி: அஜித்குமாருக்கு குவியும் வாழ்த்துகள்!

துபை கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி, அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.துணை முதல்வர் உதயநிதி: 2025 துபையில் நடைபெற... மேலும் பார்க்க