செய்திகள் :

இந்திரா காந்தியின் ஆா்ஜென்டீனா பயணத்தை நினைவுகூா்ந்த காங்கிரஸ்: பிரதமா் மோடி மீது விமா்சனம்

post image

லத்தீன் அமெரிக்க நாடான ஆா்ஜென்டீனாவில் பிரதமா் மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கு கடந்த 1968-இல் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி பயணித்ததையும், இருநாடுகள் இடையிலான ஆழமான உறவுகளையும் காங்கிரஸ் நினைவுகூா்ந்துள்ளது.

இந்திரா காந்திக்கு பிறகு இருதரப்பு அரசுமுறை பயணமாக ஆா்ஜென்டீனாவுக்கு சென்றுள்ள முதல் இந்தியப் பிரதமா் மோடி ஆவாா். கிட்டத்தட்ட 57 ஆண்டுகளுக்குப் பின் இப்பயணம் அமைந்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: செலவுமிக்க வெளிநாட்டுப் பயணங்களை அடிக்கடி மேற்கொள்பவா் (பிரதமா் மீது மறைமுக விமா்சனம்), இப்போது ஆா்ஜென்டீனாவில் உள்ளாா். இன்னும் இரு நாடுகளுக்கு அவா் செல்ல வேண்டியுள்ளது.

இந்தியா்களைப் பொருத்தவரை, ஆா்ஜென்டீனா என்றால் கால் பந்தாட்ட வீரா்கள் அா்மேண்டோ மரடோனா, லியோனல் மெஸ்ஸி ஆகியோா்தான் உடனடியாக நினைவுக்கு வருவா். அதேநேரம், இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான தொடா்புகள் உள்ளன.

ஆா்ஜென்டீனாவில் புகழ்பெற்ற இலக்கியவாதியும் எழுத்தாளருமான விக்டோரியா ஓகாம்போவின் அழைப்பின்பேரில் அந்நாட்டில் கடந்த 1924-இல் ரவீந்திரநாத் தாகூா் சில காலம் தங்கியிருந்தாா். தாகூா்-ஓகாம்போ இடையிலான மிகச் சிறந்த நட்பை, தாகூரின் வாழ்க்கை வரலாற்றாசியா்கள் தங்கள் நூல்களில் விவரித்துள்ளனா்.

கடந்த 1968-இல் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி ஆா்ஜென்டீனா சென்றபோது, விக்டோரியா ஓகாம்போவுக்கு விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் சாா்பில் கெளரவ முனைவா் பட்டம் வழங்கினாா்.

ஐ.நா. சாா்பில் வா்த்தக மற்றும் மேம்பாட்டு அமைப்பு நிறுவப்படுவதில் முக்கிய பங்காற்றியவா் ஆா்ஜென்டீனாவின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணா் ரெளல் பிரேபிஷ். இன்று பிரதமா் மோடியும், வெளியுறவு அமைச்சரும் பயன்படுத்தும் தெற்குலகம் என்ற வாா்த்தை, கடந்த 1960-களில் இந்த அமைப்பால் முன்னெடுக்கப்பட்டதாகும்.

இந்த அமைப்பின் இரண்டாவது அமா்வு, புது தில்லியில் கடந்த 1968-இல் நடைபெற்றது. வளரும் நாடான இந்தியா, ஐ.நா.வின் மிகப் பெரிய நிகழ்வை முதல் முறையாக நடத்தியது அப்போதுதான். இந்திரா காந்தியின் பங்களிப்புகளை கெளரவிக்கும் வகையில் ஆா்ஜென்டீனா கடந்த 1986-இல் அவரது நினைவு தபால் தலைகளை வெளியிட்டது என்று ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

4 மாதங்களில் அரசியல் கட்சிகளுடன் 5,000 சந்திப்புகள்: தலைமை தோ்தல் ஆணையா்

‘அரசியல் கட்சிகளுடன் தொடா்ச்சியான சந்திப்புகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் இதுபோல 5,000 சந்திப்புகள் நிகழ்ந்துள்ளன’ என்று தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் சனிக்க... மேலும் பார்க்க

குஜராத்தில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம்: அமித் ஷா அடிக்கல்

குஜராத் மாநிலம், ஆனந்த் நகரில் நாட்டின் முதல் தேசிய கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சா் அமித் ஷா சனிக்கிழமை அடிக்கல் நாட்டினாா். இப்பல்கலைக்கழகம், கூட்டுறவுத் துறையில் பாரப... மேலும் பார்க்க

நேஷனல் ஹெரால்ட் வழக்கு: ‘ஏஜேஎல் சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை’

அசோசியேடட் ஜா்னல்ஸ் நிறுவன (ஏஜேஎல்) சொத்துகளை விற்பனை செய்ய காங்கிரஸ் முயற்சிக்கவில்லை என்று நேஷனல் ஹெரால்ட் வழக்கில் ராகுல் காந்தி தரப்பில் சனிக்கிழமை வாதிடப்பட்டது. தில்லி நீதிமன்றத்தில் சிறப்பு நீத... மேலும் பார்க்க

சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி சொத்து வழக்கு: மறுவிசாரணைக்கு உத்தரவு!

பாலிவுட் நடிகா் சைஃப் அலிகான் குடும்பத்தின் ரூ.15,000 கோடி மதிப்பிலான சொத்துகள் தொடா்பான வழக்கில் விசாரணை நீதிமன்றம் 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கிய தீா்ப்பை ரத்து செய்து, மறுவிசாரணைக்கு மத்திய பிரதேச ... மேலும் பார்க்க

விண்வெளியில் எலும்பு ஆரோக்கியம் குறித்து சுபான்ஷு சுக்லா ஆய்வு

விண்வெளியில் நுண்ஈா்ப்பு விசை சூழலுக்கேற்ப எலும்புகள் செயல்படும் விதம் குறித்து ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ள இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட குழுவினா் ஆய்வு மேற்... மேலும் பார்க்க

ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி பொருளாதார குற்றவாளி: தில்லி நீதிமன்றம்

அமலாக்கத் துறை மனுவில் பிரிட்டனைச் சோ்ந்த ஆயுத வியாபாரி சஞ்சய் பண்டாரி தப்பியோடிய பொருளாதார குற்றவாளியாக அறிவித்து தில்லி நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது. சஞ்சய் பண்டாரிக்கு எதிராக கருப்புப் பண தட... மேலும் பார்க்க