செய்திகள் :

கருணை, முற்போக்கு சிந்தனையுடன் திகழ்ந்தவர்! போப் பிரான்சிஸ் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

post image

சென்னை: கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

போப் பிரான்சிஸ் இன்று(ஏப். 21) அதிகாலை உயிரிழந்ததாக வாடிகன் தெரிவித்துள்ளது. அவருக்கு வயது 88. இந்த துயரச் செய்தி உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவ மக்கள் மட்டுமில்லாது அனைத்து தரப்பினரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தநிலையில், முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘போப் பிரான்சிஸ் மறைவு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருப்பதாக’ குறிப்பிட்டுள்ளார்.

கத்தோலிக்க திருச்சபையை அக்கறையுடனும் நன்மதிப்புடன் கூடிய முற்போக்கு பாதையில் வழிநடத்தியவர் போப் என்றும் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

பிறர் துன்பத்தை தம் துன்பம் போல் எண்ணி இரக்க குணத்துடன் செயல்பட்டவர் என்றும், முற்போக்கு குரலாக ஒலித்தவர் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

ஏழை மக்களுக்கான அவரது அர்ப்பணிப்பு உணர்வு, ஒடுக்கப்பட்டோருக்கு அவர் அளித்த ஆதரவுக்கரம், ‘நீதி, அமைதி, மதங்களுக்கு’ இடையிலான நல்லிணக்கத்திற்கான பேச்சுவார்த்தை ஆகியவை கத்தோலிக்க திருச்சபையை கடந்தும் உலகெங்கிலும் அவருக்கு மரியாதையை பெற்றுத் தந்தது.

செயலில் கருணை மற்றும் மனிதநேயத்தின் மீது நம்பிக்கை ஆகியவற்றை கடைப்பிடிக்க பெருவழியை நம்மிடையே அவர் விட்டுச் சென்றுள்ளார் என்று பொருள்பட தமது இரங்கல் செய்தியில் போப் பிரான்சிஸுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார் முதல்வர்.

மகாராஷ்டிரத்தில் ஹிந்தி கட்டாயமில்லை; ஆனால் பிற மாநிலங்களில்..? மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் கேள்வி

பாஜக ஆளும் மகாராஷ்டிரத்தில் ஹிந்தி கட்டாயமில்லை என்று அம்மாநில முதல்வர் அறிவித்திருக்கும்போது, பிற மாநிலங்களில் மத்திய அரசு என்ன நிலைப்பாட்டை எடுக்கப் போகிறதென தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கேள்வி எழ... மேலும் பார்க்க

காவலர்களுக்கு வார விடுமுறை: அரசு உத்தரவை அமல்படுத்தக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு!

மதுரை: தமிழ்நாடு காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வார விடுமுறையளிக்கப்பட வேண்டும் என்கிற அரசு உத்தரவை அமல்படுத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைய... மேலும் பார்க்க

பரந்தூர் மக்கள் நம்பிக்கையோடு இருங்கள்: விஜய்

பரந்தூர் மக்கள் நம்பிக்கையோடு இருக்க வேண்டும் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

போதை மருந்து புழக்கத்தை தடுக்க பறக்கும் படைகள்: பேரவையில் அறிவிப்பு

சென்னை: போதை மருந்து புழக்கத்தை கண்காணிக்க மருந்து ஆய்வாளர்களைக் கொண்ட பறக்கும் படைகள் உருவாக்கப்படும் என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் பேரவையில் அறிவித்துள்ளார்.மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு, சட... மேலும் பார்க்க

ஜப்பானில் கனிமொழி - நெப்போலியன் சந்திப்பு!

ஜப்பான் சென்றுள்ள திமுக எம்.பி. கனிமொழி, நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியனை அவரது இல்லத்தில் சந்தித்தார். நெப்போலியனின் மகன் தனுஷ் மற்றும் மருமகள் அக்‌ஷயாவை சந்தித்து திருமண வாழ்த்துகளை ... மேலும் பார்க்க

திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை தொடக்கம்!

திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, தங்கம... மேலும் பார்க்க