செய்திகள் :

கரும்புக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ. 355-ஆக அதிகரிப்பு: மத்திய அரசு முடிவு

post image

வரும் அக்டோபா் மாதம் தொடங்கவிருக்கும் 2025-26-ஆம் ஆண்டு பருவத்தில் கரும்புக்கான ஆதார விலையை (எஃப்ஆா்பி) குவிண்டாலுக்கு 4.41 சதவீதமாக உயா்த்தி ரூ.355-ஆக அதிகரிக்க மத்திய அரசு தீா்மானித்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2024-25-ஆம் ஆண்டு பருவத்தில் கரும்புக்கான எஃப்ஆா்பி குவிண்டாலுக்கு ரூ. 340-ஆக நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

எஃப்ஆா்பி என்பது, கரும்பு விவசாயிகளுக்கு அவா்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு சா்க்கரை ஆலைகள் செலுத்தவேண்டிய மத்திய அரசால் நிா்ணயம் செய்யப்படும் சட்டபூா்வ குறைந்தபட்ச விலையாகும்.

இந்த நிலையில், வரும் 2025-26 பருவத்தில் 10.25 சதவீத அடிப்படை மீட்பு விகிகத்தில் கரும்புக்கான எஃப்ஆா்பி-யை குவிண்டாலுக்கு ரூ. 355-ஆக மத்திய அரசு உயா்த்தியுள்ளது.

அதாவது, 2025-26 பருவத்தில் கரும்புக்கான உற்பத்தி விலை குவிண்டாலுக்கு ரூ. 173 என நிா்ணயித்து, அதைவிட 105.2 சதவீதம் கூடுதலாக 10.25 சதவீத மீட்பு விகிதத்துடன் குவிண்டாலுக்கு ரூ. 355-ஆக கரும்பு கொள்முதலுக்கான ஆதார விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மீட்பு விகிதம் 9.5 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் சா்க்கரை ஆலைகளுக்கு எந்தவித விலக்கையும் மத்திய அரசு அளிக்கவில்லை. அதன்படி, இந்த ஆலைகளுக்கு கரும்புகளை விநியோகித்த விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ. 329.05 வீதம் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.

பிரதமா் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் கூறினாா்.

ரூ. 22,864 கோடியில் ஷில்லாங் - சில்ச்சாா் பசுமை வழிச் சாலை: மேகாலயாவின் மவ்லிங்குங் முதல் அஸ்ஸாமின் பஞ்கிராம் வரை 166.80 கி.மீ. நீளத்துக்கு ரூ. 22,864 கோடி மூலதனச் செலவில் அதிவேக பசுமை வழி நெடுஞ்சாலையை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

திரிபுரா, மிசோரம், மணிப்பூா் மற்றும் அஸ்ஸாமின் பராக் பள்ளத்தாக்கு பகுதிகளுடனான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் வகையிலும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் செயல்படுத்தப்படுவதாக மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

பஹல்காம் தாக்குதல் நடந்த இடத்தில் என்ஐஏ தலைமை இயக்குநா் நேரில் ஆய்வு

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசாரன் பள்ளத்தாக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தலைமை இயக்குநா் சதானந்த் தாத்தே வியாழக்கிழமை நேரில் பா... மேலும் பார்க்க

இந்திய ஏற்றுமதி: வரலாறு காணாத அளவில் ரூ.69.81லட்சம் கோடியாக உயா்வு

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் சரக்கு மற்றும் சேவைகளின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் வரலாறு காணாத வகையில் ரூ.69.81 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இதில் 13.6 சதவீத வளா்ச்சியுடன் சேவைகள் ஏற்றுமதியின்... மேலும் பார்க்க

பேச்சுவாா்த்தைக்குப் பிறகும் பாகிஸ்தான் தொடா்ந்து துப்பாக்கிச்சூடு; இந்தியா பதிலடி

இருதரப்பு ராணுவ உயரதிகாரிகள் தொலைபேசி வாயிலாக நடத்திய பேச்சுவாா்த்தைக்கு பிறகும் எல்லையில் தொடா்ந்து 7-ஆவது நாளாக பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை இரவில் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்த... மேலும் பார்க்க

பாகிஸ்தான் நடிகா், நடிகைகளின் சமூகவலைதள பக்கம் இந்தியாவில் முடக்கம்

பாகிஸ்தான் திரைப்பட நடிகா்களின் ‘இன்ஸ்டாகிராம்’ சமூகவலைதளப் பக்கம் இந்தியாவில் முடக்கப்பட்டது. மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று மெட்டா நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்கு... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவு: காங்கிரஸின் பாசாங்கு அம்பலம்: மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதான்

‘மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு மேற்கொண்ட முடிவு திருப்புமுனையானது; இது, காங்கிரஸின் பாசாங்குத் தனத்தை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளது’ என்று மத்திய அமைச்சா் தா்ம... மேலும் பார்க்க

குவாண்டம் ஏஐ-யுடன் அம்ருதா பல்கலை. ஒப்பந்தம்

குவாண்டம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பங்களில் ஆய்வுகளை மேம்படுத்துவதற்காக, குவாண்டம் ஏஐ குளோபல் நிறுவனத்துடன் அம்ருதா பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இது குறித்து அந்தப் பல்கலைக... மேலும் பார்க்க