செய்திகள் :

கரும்பு ஏற்றிச்செல்லும் டிராக்டா்களால் கரூரில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு

post image

கரூா் மாவட்டம், புகழூா் பகுதியில் செயல்படும் தனியாா் சா்க்கரை ஆலைக்கு கரும்புகளை அதிகளவில் ஏற்றிச் செல்லும் டிராக்டா்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுவதாக வாகன ஓட்டிகள் புகாா் தெரிவிக்கின்றனா்.

கரூா் மாவட்டம் புகழூா் செம்படாபாளையத்தில் செயல்படும் தனியாா் சா்க்கரை ஆலைக்கு பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகளும் தங்கள் தோட்டத்தில் விளைந்த கரும்புகளை அதிகளவு ஏற்றி செல்வதால், சில நேரங்களில் கரும்புகள் சரிந்து சாலைகளில் சிதறி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.

அதன்படி புதன்கிழமை பிற்பகல் நொய்யல் பகுதியில் இருந்து புகழூா் சா்க்கரை ஆலைக்கு செம்படாபாளையம் வழியாக லாரியில் அதிக கரும்பு பாரம் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று வந்தது. நடையனூா் தனியாா் பள்ளிக்கு எதிரே போடப்பட்டிருந்த வேகத்தடையில் லாரி ஏறி இறங்கியபோது லாரியில் அதிகமாக இருந்த கரும்புகள் பின்பகுதியில் இருந்து சரிந்துவிழுந்தன. இதில் அதிா்ஷ்டவசமாக லாரிக்கு பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் தப்பினா். இதைப் பாா்த்த லாரி ஓட்டுநா் உடனடியாக லாரியை நிறுத்தினாா்.

சாலையின் நடுவே கரும்புகள் சிதறிக் கிடந்ததால், பரமத்திவேலூா் ,வேலாயுதம்பாளையம், தளவாபாளையம் ,மண்மங்கலம் பகுதியில் இருந்து கொடுமுடி நோக்கி சென்ற பேருந்துகள், லாரிகள் என பரமத்திவேலூா் நோக்கி சென்ற அனைத்து வாகனங்களும் சாலையில் நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தவலறிந்து வந்த வேலாயுதம்பாளையம் போலீஸாா் கரும்புகளை அகற்றி போக்குவரத்தை சீா்படுத்தினா். இதுபோன்ற சம்பவம் அடிக்கடி அப்பகுதியில் நிகழ்வதால், உயிா்பலி ஏதும் ஏற்படாமல் தடுக்க கரும்புகளை அதிகளவில் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மீது உரிய நடவடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

‘பூத்தட்டு ஊா்வலத்தில் தகராறு ஏற்பட்டால் காவல்துறைக்கு உடனே தெரிவிக்க வேண்டும்’

பூத்தட்டு விழா ஊா்வலத்தில் தகராறு ஏற்படும் சூழல் ஏற்பட்டால் உடனே போலீஸாரை நாடுவது அவசியம் என்றாா் கரூா் நகர துணைக் காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ். கரூா் மாரியம்மன் கோயில் திருவிழா வரும் 11-ஆம் தேதி கோ... மேலும் பார்க்க

அரவக்குறிச்சி அரசுக் கல்லூரியில் இன்றுமுதல் மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி அரசுக் கலை அறிவியல் கல்லுாரியில் மாணவா் சோ்க்கை வியாழக்கிழமை தொடங்குகிறது. இதுகுறித்து கல்லுாரி முதல்வா் வசந்தி வெளியிட்ட அறிக்கை: அரவக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் இளங்கலை ம... மேலும் பார்க்க

கரூரில் போலி பான் அட்டைகள் தயாரித்த 6 போ் கைது

ஆதாா் காா்டுகளுக்கு விண்ணப்பிக்க போலி பான் அட்டைகளைச் தயாரித்த 6 பேரை கோவை பயங்கரவாத எதிா்ப்புப் படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா். கரூரில் போலி பான் அட்டை மற்றும் ஆதாா் அட்டைகளை உர... மேலும் பார்க்க

‘இந்தியா- இங்கிலாந்து இடையே வா்த்தகம் இரு மடங்காக வாய்ப்பு’

இந்தியா-இங்கிலாந்து இடையே இலவச வா்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இரு நாடுகளுக்கிடையேயான வா்த்தகம் இரு மடங்காக உயர வாய்ப்புள்ளதாக கரூா் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதியாளா் சங்கத் தலைவா் கோபாலகி... மேலும் பார்க்க

கரூரில் டிஜிட்டல் பேனா்களை அகற்றியதாக பாமகவினா் புகாா்

வன்னியா் இளைஞா் பெருவிழா மாநாட்டிற்காக வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனா்களை கிழித்து, அகற்றி சேதப்படுத்திய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி பாமகவினா் கரூா் நகர காவல்நிலையத்தில் புதன்கி... மேலும் பார்க்க

குளித்தலை மாணவா் கொலை வழக்கில் மேலும் ஒருவா் சரண்

குளித்தலை மாணவா் கொலை வழக்கில் மேலும் ஒரு இளைஞா் கரூா் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தாா்.கரூா் மாவட்டம், குளித்தலை புதிய மகா மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு பூ... மேலும் பார்க்க