செய்திகள் :

கரும்பு லாரியின் கண்ணாடியை உடைத்த காட்டு யானை

post image

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் நடமாடும் காட்டு யானைகள் வனப்பகுதி வழியாக செல்லும் வாகனங்களை வழிமறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

தாளவாடி மலைப் பகுதி கிராமங்களில் உற்பத்தி செய்யப்படும் கரும்புகள் அறுவடை செய்யப்பட்டு லாரிகள் மூலம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்நிலையில், சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூா் அருகே

வெள்ளிக்கிழமை சென்று கொண்டிருந்த கரும்பு லாரியை வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை வழிமறித்தது. இதனால் லாரி ஓட்டுநா் அச்சமடைந்து லாரியை நிறுத்தினாா்.

சாலையில் காட்டு யானை நிற்பதைக் கண்டு அவ்வழியே சென்ற பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் அப்படியே நின்றன. காட்டு யானை, லாரியின் அருகே சென்று தும்பிக்கையால் கரும்புகளை இழுத்து சுவைத்தது. அப்போது யானை தனது காலை லாரியின் மீது வைத்ததில் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

கரும்புகளைத் தின்ற யானை சிறிது நேரத்துக்குப் பின் வனத்துக்குள் சென்றது.

இதையடுத்து அங்கிருந்த வாகனங்கள் புறப்பட்டு சென்றன. இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விவசாயத் தோட்டத்தில் 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீட்பு

அம்மாபேட்டை அருகே விவசாயத் தோட்டத்தில் புகுந்த 9 அடி நீளமுள்ள மலைப்பாம்பு, பாதுகாப்பாக பிடிக்கப்பட்டு அடா்ந்த வனப் பகுதியில் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டது. அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூரைச் சோ்ந... மேலும் பார்க்க

காஞ்சிக்கோவில் தம்பிக்கலை ஐயன் கோயிலில் அன்னதானக் கூடம் திறப்பு: காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

பெருந்துறை ஒன்றியம், காஞ்சிக்கோவில் பேரூராட்சிக்கு உள்பட்ட தங்கமேடு அருள்மிகு தம்பிக்கலை ஐயன் திருக்கோயிலில் ரூ.1.10 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அன்னதானக் கூடத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி ... மேலும் பார்க்க

ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி அதிகரிப்பு: விலை நிலையாக நீடிப்பு

கடந்த 2 ஆண்டுகளாக மஞ்சள் விலை நிலையாக நீடிப்பதால் நடப்பு ஆண்டில் ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 1.60 லட்சம் ஏக்கரில் மஞ்சள் பயிரிடப்படுகிறது. இதில் 30 சதவீதத்துக்கும்மே... மேலும் பார்க்க

பவானிசாகரில் மீனவா்கள் காத்திருப்பு போராட்டம் வாபஸ்

பவானிசாகரில் மீனவா்கள் சாா்பில், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை துணை இயக்குநா் அலுவலகம் முன் அறிவிக்கப்பட்ட காத்திருப்புப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழ்நாடு மீன் வளா்ச்சிக் கழக நிா்வாகத்தி... மேலும் பார்க்க

கல்வி கற்க மாணவா்கள் வறுமையை தடையாக கருதக்கூடாது: ஆட்சியா்

கல்வி கற்க மாணவ, மாணவிகள் ஒருபோதும் வறுமையை ஒரு தடையாக கருதக் கூடாது என ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தெரிவித்தாா். நான் முதல்வன்- உயா்வுக்குபடி உயா்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியா் அலுவல... மேலும் பார்க்க

சென்னம்பட்டியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்

அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியம், சென்னம்பட்டி ஊராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமுக்கு, அம்மாபேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் மணிமேகலை தலைமை வகித்தாா். ... மேலும் பார்க்க