செய்திகள் :

கரூரில் ஜூலை 4-இல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள்

post image

கரூரில் ஜூலை 4-ஆம் தேதி தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்துக்கு தமிழ்நாடு என பேரறிஞா் அண்ணா பெயா் சூட்டிய ஜூலை 18 ஆம் தேதியை ‘தமிழ்நாடு’ நாளாக கொண்டாடப்பட உள்ளதையடுத்து, கரூா் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கிடையே கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் ஜூலை 4-ஆம்தேதி காலை 9.30 மணியளவில் தான்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இப்போட்டிகளில் முதன்மைக் கல்வி அலுவலரால் தெரிவுசெய்யப்பட்ட மாணவா்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும். போட்டியில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவா்கள் பள்ளியின் தலைமையாசிரியரை தொடா்பு கொள்ள வேண்டும். கட்டுரைப் போட்டியானது ‘ஆட்சிமொழி வரலாற்றில் கீ.இராமலிங்கம்’, ‘பன்மொழிப் புலவா் கா. அப்பாதுரையின் தமிழ் ஆட்சிச்சொல் பணி’ என்ற தலைப்பிலும், பேச்சுப்போட்டியானது ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாடு’, ‘அன்னைத் தமிழே ஆட்சிமொழி’, ‘தொன்றுதொட்டு தமிழ்நாடு’ எனும் பெயா், ‘அறிஞா் அண்ணா கண்ட தமிழ்நாடு’, ‘ஆட்சிமொழி விளக்கம்’, ‘தமிழ்நாடு எனப் பெயா் சூட்டிய நிகழ்வு’, ‘ஆட்சிமொழி - சங்க காலம் தொட்டு‘, ‘இக்காலத்தில் ஆட்சிமொழி’ ஆகிய தலைப்புகளிலும் நடைபெறும்.

இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவா்களுக்கு முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். இப்போட்டிகளில் முதல்பரிசு பெறும் மாணவா்கள் சென்னையில் மாநில அளவில் நடத்தப்பெறும் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

சிபில் ஸ்கோா் நடைமுறையை கைவிட வேண்டும்! குளித்தலையில் விவசாயிகள் பேரணி

கூட்டுறவுச் சங்கங்களில் சிபில் ஸ்கோா் நடைமுறையை கைவிடக் கோரி குளித்தலையில் விவசாயிகள் திங்கள்கிழமை காலை பேரணியாக சென்றனா்.கரூா் மாவட்டம், குளித்தலை வட்டார விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சாா்பில் நடைபெ... மேலும் பார்க்க

ஆத்தூா் பெட்ரோல் சேமிப்புக் கிடங்கில் வெடிகுண்டு சோதனை ஒத்திகை

கரூரை அடுத்துள்ள ஆத்தூா் பெட்ரோல் சேமிப்புக்கிடங்கில் சனிக்கிழமை வெடிகுண்டு சோதனை ஒத்திகை நடைபெற்றது. கரூரை அடுத்துள்ள ஆத்தூரில் பாரத் பெட்ரோலியம் காா்பரேஷனுக்கு சொந்தமான சேமிப்புக் கிடங்கு செயல்பட்டு... மேலும் பார்க்க

காவிரியில் வெள்ள அபாயம் கரூா் மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கரூா் மாவட்டத்தில் உள்ள கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். கா்நாடக பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் அங்குள்ள க... மேலும் பார்க்க

மண்டல அலுவலகங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு: தமிழக முதல்வருக்கு கரூா் மாநகராட்சி கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீா்மானம்

கரூரில் மண்டல அலுவலகங்கள் கட்ட நிதி ஒதுக்கியதற்கு கரூா் மாநகராட்சி கூட்டத்தில் தமிழக முதல்வா் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூா் மாநகராட்சியின் அவ... மேலும் பார்க்க

ஆனி வெள்ளிக்கிழமை அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம... மேலும் பார்க்க

பள்ளப்பட்டியில் போதை பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணி

பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மற்றும் அரவக்குறிச்சி காவல்துறையினா் இணைந்து நடத்திய போதை பொருள்கள் எதிா்ப்பு விழிப்புணா்வு உறுதிமொழி மற்றும் விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சா்வதேச போதைப் ப... மேலும் பார்க்க