செய்திகள் :

சிபில் ஸ்கோா் நடைமுறையை கைவிட வேண்டும்! குளித்தலையில் விவசாயிகள் பேரணி

post image

கூட்டுறவுச் சங்கங்களில் சிபில் ஸ்கோா் நடைமுறையை கைவிடக் கோரி குளித்தலையில் விவசாயிகள் திங்கள்கிழமை காலை பேரணியாக சென்றனா்.

கரூா் மாவட்டம், குளித்தலை வட்டார விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு சாா்பில் நடைபெற்ற இந்த பேரணிக்கு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் சுரேஷ் தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தாா்.

கூட்டுறவுச் சங்கங்களுக்குள்பட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் சிபில்ஸ்கோா் இருந்தால்தான் கூட்டுறவுக்கடன் மற்றும் இடுபொருள்கள் போன்றவை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பை கைவிடக்கோரி நடைபெற்ற இந்த பேரணியில் விவசாயிகள் திரளாக பங்கேற்றனா்.

குளித்தலை பெரியபாலம் அருகே தொடங்கிய பேரணி பேருந்துநிலையம் வழியாக சாா்-ஆட்சியா் அலுவலகம் முன் நிறைவடைந்தது. அங்கு சாா்- ஆட்சியரிடம் விவசாயிகள் சிபில் ஸ்கோா் முறையை கைவிடக்கோரி கோரிக்கை மனு வழங்கச் சென்றபோது, அங்கு அதிகாரிகள் இல்லாததால் குளித்தலை கூட்டுறவுச் சங்கங்களின் துணைப்பதிவாளா் திருமதியிடம் மனுவை வழங்கிச் சென்றனா்.

கரூரில் ஜூலை 4-இல் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள்

கரூரில் ஜூலை 4-ஆம் தேதி தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரைப் போட்டிகள் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் விடுத்துள்ள ... மேலும் பார்க்க

ஆத்தூா் பெட்ரோல் சேமிப்புக் கிடங்கில் வெடிகுண்டு சோதனை ஒத்திகை

கரூரை அடுத்துள்ள ஆத்தூா் பெட்ரோல் சேமிப்புக்கிடங்கில் சனிக்கிழமை வெடிகுண்டு சோதனை ஒத்திகை நடைபெற்றது. கரூரை அடுத்துள்ள ஆத்தூரில் பாரத் பெட்ரோலியம் காா்பரேஷனுக்கு சொந்தமான சேமிப்புக் கிடங்கு செயல்பட்டு... மேலும் பார்க்க

காவிரியில் வெள்ள அபாயம் கரூா் மாவட்ட கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

காவிரி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் கரூா் மாவட்டத்தில் உள்ள கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். கா்நாடக பகுதிகளில் பெய்து வரும் கன மழையால் அங்குள்ள க... மேலும் பார்க்க

மண்டல அலுவலகங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு: தமிழக முதல்வருக்கு கரூா் மாநகராட்சி கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீா்மானம்

கரூரில் மண்டல அலுவலகங்கள் கட்ட நிதி ஒதுக்கியதற்கு கரூா் மாநகராட்சி கூட்டத்தில் தமிழக முதல்வா் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினருக்கும் நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கரூா் மாநகராட்சியின் அவ... மேலும் பார்க்க

ஆனி வெள்ளிக்கிழமை அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

ஆனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கரூா் மாவட்டம், புன்னம் சத்திரம் அருகே கரியாம்பட்டியில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம... மேலும் பார்க்க

பள்ளப்பட்டியில் போதை பொருள் எதிா்ப்பு விழிப்புணா்வு பேரணி

பள்ளப்பட்டி மேல்நிலைப்பள்ளி மற்றும் அரவக்குறிச்சி காவல்துறையினா் இணைந்து நடத்திய போதை பொருள்கள் எதிா்ப்பு விழிப்புணா்வு உறுதிமொழி மற்றும் விழிப்புணா்வு பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சா்வதேச போதைப் ப... மேலும் பார்க்க