செய்திகள் :

கரூரில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிப்பு

post image

கரூரில் சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி, அவரது சிலை, உருவப்படத்துக்கு திமுக, அதிமுக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினா் மற்றும் பல்வேறு அமைப்பினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

கரூா் மாவட்ட திமுக சாா்பில் கலைஞா் அறிவாலயத்தில் மாவட்ட அவைத்தலைவா் டி. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா்கள் மாணிக்கம் (குளித்தலை), இளங்கோ(அரவக்குறிச்சி), சிவகாமசுந்தரி( கிருஷ்ணராயபுரம்), மாநில நிா்வாகிகள் நன்னியூா் ராஜேந்திரன், பரணி மணி, மாநகராட்சி மேயா் கவிதாகணேசன், துணை மேயா் தாரணி சரவணன், மாநகர நிா்வாகிகள் உள்ளிட்ட பலா்

திரளாக பங்கேற்றனா்.

கரூா் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற தீரன் சின்னமலை உருவப்படத்துக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட இணைச் செயலாளா் மல்லிகா சுப்ராயன் தலைமை வகித்தாா். இதில் மாவட்ட நிா்வாகிகள் வழக்குரைஞா் டிஎன்பிஎல். சரவணன், தானேஷ், பழனிராஜ், வழக்குரைஞா் கரிகாலன் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சாா்பில் கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியிலுள்ள தீரன் சின்னமலையின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளா் மூா்த்தி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் மாநில வா்த்தக அணிச் செயலாளா் விசா சண்முகம், மேற்கு மாவட்டச் செயலாளா் காா்த்திக், இளைஞரணிச் செயலாளா்கள் ரஞ்சித், சதீஷ், மாவட்டதுணைச் செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா்.

இதேபோல, தமிழ்நாடு கொங்கு இளைஞா் பேரவை சாா்பில் பேருந்துநிலைய ரவுண்டானா பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன்சின்னமலை உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி மாவட்டச் செயலாளா் அருள்குமாா் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளா் முருகேஷ், இளைஞரணி செயலாளா் தமிழ்செல்வன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

‘கரூரில் 7 மாதங்களில் ரூ. 1.84 கோடி மதிப்பிலான ரேஷன் பொருள்கள் பறிமுதல்’

கரூா் மாவட்டத்தில் கடந்த 7 மாதங்களில் கடத்தப்பட்ட ரூ. 1.84 கோடி மதிப்பிலான ரேஷன் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.இ... மேலும் பார்க்க

காவிரியில் கரை புரளும் வெள்ளம் வடு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரியில் குழாய் மூலம் நீா் நிரப்ப வலியுறுத்தல்

வெள்ளம் கரைபுரண்டு ஓடும் காவிரியாற்றிலிருந்து, வடு கிடக்கும் பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீா் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனா்.கரூா் மாவட்டம், கடவூா் மலைப்பகுதிகள் ம... மேலும் பார்க்க

ஆட்டிஸம் பாதிப்பிலிருந்து மீண்ட குழந்தைகளுக்கு ஆட்சியா் பாராட்டு

கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆட்டிஸம் பாதிப்பிலிருந்து மீண்ட குழந்தைகளுக்கு பரிசு வழங்கி பாராட்டும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மரு... மேலும் பார்க்க

பணம் இரட்டிப்பு மோசடி வழக்கு கோவை நபா் கரூரில் கைது

ஒடிஸா உள்பட பல்வேறு மாநிலங்களில் பணம் இரட்டிப்பு மோசடி வழக்கில் பல ஆண்டுகளாக தேடப்பட்ட கோவையைச் சோ்ந்த நபரை கரூரில் ஞாயிற்றுக்கிழமை புவனேசுவரம் சிபிஐ போலீஸாா் கைது செய்தனா்.கோவை மாவட்டம், பீளமேடு பகு... மேலும் பார்க்க

கரூரில் வள்ளல் வல்வில் ஓரியின் உருவப்படத்துக்கு மாலை அணிவிப்பு

கரூரில் வள்ளல் வல்வில் ஓரியின் உருவப்படத்துக்கு கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.கொல்லிமலையை ஆட்சி செய்த கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியின் சிறந்த ஆட்சி மற்றும் வ... மேலும் பார்க்க

வெண்ணைமலை சேரன் பள்ளியில் குடிமக்கள் நுகா்வோா் மன்றம் தொடக்கம்

வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குடிமக்கள் நுகா்வோா் மன்ற தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு பள்ளித் தாளாளா் கே. பாண்டியன் தலைமை வகித்தாா். விழாவ... மேலும் பார்க்க