செய்திகள் :

கரூர்: அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்யும் தடயவியல் துறை; விசாரணையைத் தொடங்கிய அருணா ஜெகதீசன்

post image

கரூரில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 க்கும் மேற்பட்ட உயிரிழந்திருக்கின்றனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைத்த விசாரணை ஆணையத்தின் சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் கரூரில் தனது விசாரணையைத் தொடங்கியிருக்கிறார்.

ஆய்வு செய்யும் அதிகாரிகள்
ஆய்வு செய்யும் அதிகாரிகள்

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு தொடர்பாகவும் அருணா ஜெகதீசன் தலைமையில்தான் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிருந்தது.

அந்த அறிக்கையையும் சில ஆண்டுகளுக்கு முன் அருணா ஜெகதீசன் தமிழக அரசிடம் சமர்ப்பித்திருந்தார்.

இந்நிலையில், இன்று மாலை ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் விஜய் பரப்புரை நடத்திய வேலுசாமிபுரத்தில் அரை மணி நேரமாக ஆய்வு செய்தார்.

பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் பார்த்ததோடு மட்டுமல்லாமல், காவல்துறையினரிடமும் சில விஷயங்களைக் கேட்டறிந்துகொண்டார்.

அவரின் ஆய்வு முடிந்த பிறகு, தடயவியல் துறையினர் சம்பவம் நடந்த இடத்தை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்து ரிப்போர்ட் எடுத்து வருகின்றனர்.

விஜய் பிரசாரம் கரூர்
விஜய் பிரசாரம் கரூர்

த.வெ.க தொண்டர்கள் ஏறி உடைத்த மேற்கூரைகள், மரங்கள், இருச்சக்கர வாகனங்கள், ஸ்பீக்கர்கள் மற்றும் சிதறிக்கிடக்கும் செருப்புகள் என போலீசார் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கும் அத்தனை பகுதியையும் சோதித்து ரிப்போர்ட் எழுதிக் கொண்டனர்.

காவல்துறை பாதுகாப்பு வளையத்திற்குள் வைத்திருக்கும் அந்த இடத்தை இன்றும் எக்கச்சக்கமான மக்கள் நேரில் வந்து பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.

கரூர் நெரிசல்: "கலெக்டரையும், எஸ்.பியையும் சஸ்பெண்ட் செய்யணும்" - அண்ணாமலை சொல்வதென்ன?

கரூர், வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.கூட்ட நெரிசலில் 40 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர், சிலர் கவலைக்கிடமா... மேலும் பார்க்க

TVK Vijay Karur Stampede: "கரூர் சம்பவத்தால் வருத்தமடைந்தேன்" - மம்முட்டி இரங்கல்

நேற்று கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதில் 40 பேர் உயிரிழந்திருந்தனர் பலர் காயமடைந்திருந்தனர்.தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கரூருக்கு நேரில் சென்று ஆ... மேலும் பார்க்க

கரூர்: அன்புமணிக்கும், செந்தில் பாலாஜிக்கும் ஒதுக்கிய உழவர் சந்தை திடல்; விஜய்க்கு மறுத்தது ஏன்?

த.வெ.க. சார்பில் உழவர் சந்தை திடலில் கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தார்கள். அந்த இடத்தில் கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி அளித்திருக்கவில்லை. உழவர் சந்தை பகுதியில் விசாரித்ததில், அன்புமணியின் கூட்டத்த... மேலும் பார்க்க

``விஜய் போன்ற பிரபலங்களுக்கு கட்டுக்கடங்காத கூட்டம் வரும், அதனால்'' - FEFSI சொல்வதென்ன?

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரச்சாரத்தில் உயிரிழந்த சம்பவம் குறித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (film employees federation of south india) அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ... மேலும் பார்க்க

கரூர்: 'சிபிஐ விசாரணை வேண்டும்'- ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள்

கரூரில் தவெக நடத்திய தேர்தல் பிரசாரத்தில் 40 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "நேற்றைய தினம் நடந்த இந்த துயர சம்பவம் தமிழக மக்களின் நெஞ்சை... மேலும் பார்க்க

கேரளா: `எய்ம்ஸ் மருத்துவமனை எங்கு அமைப்பது?' - பாஜக தலைவர்கள் விவாதம்; வீணா ஜார்ஜ் ஆவேசம்

திருச்சூரில் எய்ம்ஸ் மருத்துவமனை - சுரேஷ் கோபிகேரள மாநிலத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது சம்பந்தமான விவாதம் தற்போது எழுந்துள்ளது. எந்த மாவட்டத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பதில் பா.ஜ... மேலும் பார்க்க